தாயார் சன்னதி, சிலிக்கான் கடவுள் – சொல்வனம் புத்தக வெளியீடுகள்

logo3

அன்புள்ள நண்பர்களுக்கு,

இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகவிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. இப்புத்தகங்களின் விலை, விற்பனைக்குக் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றைக் குறித்து விரைவில் அறிவிக்கிறோம். சொல்வனம் இதழைத் தொடர்ந்து ஆதரித்து, இதழை நாங்கள் உற்சாகமாக நடத்தக் காரணமாயிருக்கும் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய இந்தப் புதிய முயற்சிக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.


தாயார் சன்னதி – சுகா – 256 பக்கங்கள் – ரூ.150
சிலிக்கான் கடவுள் – ராமன் ராஜா – 160 பக்கங்கள் -ரூ 100

புத்தகங்களைக் கீழ்க்கண்ட புத்தகக்கடைகளில் வாங்கலாம்.

டிஸ்கவரி புக் பேலஸ் – சென்னை,

இலக்கம் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, வெஸ்ட் கே.கே நகர்,
சென்னை – 600078. தமிழ்நாடு.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் அமைந்துள்ளது)
+91 99404 46650, +91 44 6515 7525

நியூ புக் லேண்ட்ஸ் – சென்னை,

52c, basement,
பனகல் பார்க் அருகில்,
தி-நகர்,
சென்னை- 600017

அருள் நந்தி சிவம் புத்தக நிலையம், கண்ணம்மன் கோயில் தெரு, ஷங்ஷன், திருநெல்வேலி, 04622339692
ஷ்யாமளா புக் செண்டர், வடக்கு ரத வீதி, திருநெல்வேலி,
ஸ்ரீ சிவகணேஷ் புக் செண்டர், மேல ரத வீதி, திருநெல்வேலி, 9751560600

பாரதி புக் ஹவுஸ், மதுரை

உடுமலை புக் சென்டர், உடுமலைப்பேட்டை
விஜயா பதிப்பகம், கோவை
புக்ஸ் & புக்ஸ், பொள்ளாச்சி
பாரதி புத்தகாலயம் – ஈரோடு,

ராமகிருஷ்ணா புக் ஸ்டால், பரமக்குடி
சரவணனா புக் ஸ்டால், காந்திஜி ரோடு, பரமக்குடி
JB புக் சென்டர், தாராபுரம் (பேருந்து நிலையம் எதிரில்)

இணையத்திலும் உடுமலை.காம் மூலம் இப்புத்தகங்களை வாங்கலாம்.

இணையத்தில் ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை வாங்க :

1. udumalai.com

2. chennaishopping.com

இணையத்தில் ‘சிலிக்கான் கடவுள்

மிக்க அன்புடன்,
ஆசிரியர் குழு.

இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ. நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது.
— வண்ணதாசன்

சுகாவின் பிறந்த மண் பற்றிய துல்லியமான பதிவுகளும், வசீகரமான வட்டார வழக்குப் பிரயோகமும், ஹாஸ்ய உணர்வும், படித்து முடித்த பின்பும் மனசை விட்டகலாத இனிய விஷயங்கள். இந்தக் கட்டுரைகள் மூலம் தெரியவந்த சுகாவின் இசைஞானம் எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னோடு இருந்த 8 வருடங்களில் எனக்குத் தெரியாமல் போன விஷயம் அது.

— பாலுமகேந்திரா

divider2

அறிவியல் பற்றி தமிழில் எழுதி எல்லோரின் கவனத்தையும் திருப்பிய சுஜாதாவிற்கு அடுத்தபடியாக ராமன் ராஜா இன்றைய பொழுதில் இயங்கி வருகிறார். அறிவியலை சுவாரஸ்யமாக எழுதுவது என்பது சிலசமயம் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி அறிவியலை இரண்டாம்பட்சமாக்கிவிடக்கூடிய ஆபத்து உண்டு. ஆனால் ராமன் ராஜாவின் எழுத்து அப்படிப்பட்டதில்லை. அறிவியலின் மீதும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வளர்ச்சி நிலைகள் மீது குவிமையம் எப்போதுமே இருக்கும் வகையில் ராமன் ராஜாவின் எழுத்து அமைந்துள்ளது.
— கோபால் ராஜாராம்

’சிலிக்கான் கடவுள்’ புத்தகத்துக்கு சேதுபதி அருணாசலம் எழுதியிருக்கும் நன்றியுரையை இங்கே படிக்கலாம்.