மார்ச் 22-ஆம் தேதியை உலக நீர் நாளாக ஐ.நா நிறுவனம் அங்கீகரித்து நீர் நிலைகள் மாசு படுவதையும், நிலத்தடி நீர் சேகரிப்பின் அவசியத்தையும் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடம் நேஷனல் ஜியோகரஃபிக் இதழும் நீர்நிலைகளைப் பற்றிய தனிக்கவனம் எடுத்து ஒரு சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது. நீர் மாசுபடுதல், வீணாதல், வறட்சி இவற்றை முன்னிருத்தும் அருமையான புகைப்படங்களின் கண்காட்சியையும் நடத்துகிறது. Boston.com இத்தொகுப்பிலிருந்தும், சேகரத்திலிருந்தும் சில புகைப்படங்களைத் தொகுப்பாக ‘World Water Day’ என்ற தலைப்பில் தந்திருக்கிறது. அப்புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்: