முகப்பு » தொகுப்பு

அறிவிப்பு பகுதியில் பிற ஆக்கங்கள்

அறிவிப்பு »

இரு இலக்கிய விருதுகள் - 2012

மூத்த படைப்பாளிகளான நாஞ்சில் நாடன் அவர்களும், தேவதேவன் அவர்களும் முறையே கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ஆம் ஆண்டுக்கான இயல் விருதும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். நாஞ்சில் நாடன், தேவதேவன் இருவருக்கும் சொல்வனம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மூத்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு அமைப்புகளுக்கும் சொல்வனத்தின் வாழ்த்துகள்.

அறிவிப்பு, புத்தக முன்னுரை »

விழி வழி மொழி, மொழி வழி விழி

திரு.அரவக்கோன் எழுதி சொல்வனத்தில் வெளியாகிய ‘20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்’ என்ற ஓவியத்தொடர் புத்தக வடிவம் பெறுகிறது. சதுரம் பதிப்பகம் வெளியீடாக விரைவில் வெளியாகவிருக்கும் இப்புத்தகத்துக்கு க்ருஷாங்கினி எழுதியிருக்கும் முன்னுரையை இங்கே வழங்குகிறோம். திரு.அரவக்கோன் அவர்களுக்கு சொல்வனத்தின் வாழ்த்துகள்.

அறிவிப்பு »

க.நா.சு சிறப்பிதழ்

இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாக இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம். அவருடைய தீவிர விமர்சகர்கள் கூட அவரது திறமை, கூர்மை, உழைப்பு ஆகியவற்றையும், தமிழிலக்கியத்துக்கு அவர் கொடுத்த பெரும் கொடைகள் பற்றியும் குறை சொல்வதில்லை.

கருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைபாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. க.நா. சுப்ரமண்யம் என்கிற ஒரு நபர் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் வாழ்ந்து இதைச் சாதித்திருக்கிறார். இந்த ஆண்டு அவர் தோன்றி நூறாண்டு ஆகிற வருடம்.

சொல்வனத்தின் 75ஆம் இதழை, அவருடைய நூற்றாண்டு நினைவுச் சிறப்பிதழாகக் கொண்டு வரத் தீர்மானித்ததற்கு இந்தப் பொது நிலையை அவர் பெற்றிருப்பது குறித்து எங்களுக்கிருக்கும் வியப்பும் ஒன்று.

அறிவிப்பு »

வீட்டுக் குருவிகளைக் காப்போம்!

வீட்டுக் குருவிகளைக் காக்கும் இந்த மக்கள் அறிவியல் திட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.. வீட்டுக் குருவிகள் நம் நாடெங்கும் எந்த நிலையில் உள்ளன, எந்தப் பகுதிகளில் பரவலாகவும் எங்கு குறைவாகவும் உள்ளன என்பது குறித்து நீங்கள் பகிரக்கூடிய தகவல்கள் முக்கியமானவை. www.citizensparrow.in என்ற தளத்தில் ஒரு ஐந்து நிமிட அளவில் நீங்கள் உங்கள் சுற்றுவட்டாரத்தில் குருவிகளின் இருப்பை ஆவணப்படுத்துவதன் மூலம் இந்தியாவெங்கும் உள்ள வீட்டுக் குருவி ஆர்வலர்களோடு நீங்களும் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.

அறிவிப்பு »

அன்புள்ள வாசகர்களுக்கு…

போக வேண்டிய தூரம் வெகு அதிகம் என்பதையும் நாம் அறிவோம். இப்பயணத்தில் தங்கள் உறுதுணையே எங்கள் பேராதரவு. சொல்வனம் தொழில் முறையில் இல்லாத, வியாபார நோக்கு அற்ற, மனிதரிடையே பிரிவினை செய்யும் எதையும் ஏற்காத, எளிமையும், உண்மைத் தேட்டமும் உள்ள, தங்களை முன்னிறுத்த முயலாத வெகு சிலரால் நடத்தப்பட்டு வருகிறது. சொல்வனத்தின் பல வேலைகளையும் இந்த சிலரே செய்கிறோம்.

அறிவிப்பு »

2012 புத்தகக் கண்காட்சியில் சொல்வனம் வெளியீடுகள்

நண்பர்களுக்கு,
இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை புத்தகக் கண்காட்சி, புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது.  இந்தப் பள்ளி பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது.
இக்கண்காட்சியில் சொல்வனம் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்கள் கிடைக்கும்.
தாயார் சன்னதி - இரண்டாம் பதிப்பு - சுகா
சென்ற புத்தகக் கண்காட்சியில் வெளியான சுகா எழுதிய தாயார் சன்னதி புத்தகம் முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து இந்தக் கண்காட்சிக்கு இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது. இப்புத்தகத்தை சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பக அரங்கில் (அரங்க எண் - F007) வாங்கலாம்.
இப்புத்தகத்தை இணையத்தில் வாங்க:  https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html

இப்புத்தகத்திற்கு வண்ணதாசன் எழுதிய முன்னுரை : சுகாவுக்குப் பூசினது
தாயார் சன்னதி - ஒரு பண்பாட்டுச் சூழலை முன்வைத்து - நாறும்பூநாதன்
‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு ஒரு பார்வை …

அறிவிப்பு »

‘மூங்கில் மூச்சு’ புத்தக வடிவில்

தமிழ்ச் சமூகத்தில் நடந்த பல்வேறு காலச்சார மாற்றங்களையும் போகிற போக்கில் சுகா பதிவு செய்து கொண்டு போகிறார். இது மூங்கில் விடும் மூச்சு மட்டுமே அல்ல….ஓர் இளைஞனின், காலத்தின், ஒரு தலைமுறையின் சுவாசம்!

அறிவிப்பு »

‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு - இப்போது விற்பனையில்

எழுத்தாளர் சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை சொல்வனம் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தை இணையம் மூலமாக வாங்க முடியும்.

அறிவிப்பு »

’பனுவல் போற்றுதும்’  - புத்தக வடிவில்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்வனம் இதழில் ‘பனுவல் போற்றுதும்’ என்ற தொடரில் அரிய புத்தகங்களை அறிமுகப்படுத்தி வந்தார். அந்தத் தொடர் இப்போது புத்தக வடிவில் ‘தமிழினி’ வெளியீடாக வெளிவருகிறது.

அறிவிப்பு »

’உடையும் இந்தியா?’ புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

’உடையும் இந்தியா?’ புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அறிவிப்பு »

இதழ் குறித்து…

துவக்கத்திலிருந்து ’சொல்வனம்’ இலக்கியம் மட்டுமல்லாமல் பல்துறை சார்ந்த கட்டுரைகளையும், புனைவுகளையும் வெளியிட்டுவருகிறது. இவற்றுக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் மறுவினைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. தொடர்ந்து சொல்வனம் இதே திசையில் செல்லும். சமீபத்தில் பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோருக்கு அவர்களின் பல பத்தாண்டு கால இலக்கிய இயக்கத்தைக் கௌரவிக்கும் வகையில் பொருத்தமான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களை எம் பங்குக்குக் கெளரவப்படுத்தும் விதமாக, இந்த இதழில் எப்போதும் போல் பல்துறை சார்ந்த கட்டுரைகளுடன், அவர்கள் சம்பந்தப் பட்ட சில படைப்புகளையும் வெளியிட்டுள்ளோம்.

அறிவிப்பு »

விஷ்ணுபுரம் விருது 2011

’விஷ்ணுபுரம் விருது 2011’ விழா அழைப்பிதழ்

அறிவிப்பு »

SPARROW - ஒரு பெண்களின் நிறுவனம்

பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). எழுத்தாளர் அம்பையின் பங்களிப்பை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் குறித்து ஒரு அறிவிப்பு.

அறிவிப்பு »

இலக்கிய அங்கீகாரங்கள்

சமீபத்தில் இரு இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டும் தகுதியான படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான ‘சாரல்’ விருதிற்கு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும், வண்ணதாசனுக்கும் அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் பூமணிக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். தகுதி வாய்ந்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் சாரல் விருது அமைப்புக்கும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் சொல்வனம் தெரிவித்துக் கொள்கிறது.

அறிவிப்பு »

அன்புள்ள நண்பர்களுக்கு,
லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகம் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடாக வெளிவரவிருக்கிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
துருவ நட்சத்திரம் புத்தகத்தின் வெளியீட்டு விழா 11.12.2011 அன்று சென்னை ராகசுதா ஹாலில் நடைபெறும். வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து விஜயலட்சுமி சுப்ரமணியனின் கச்சேரியும் நடைபெறும். அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் கீழே அளிக்கப்பட்டுள்ளது.