இறையியல் பகுதியில் பிற ஆக்கங்கள்
இறையியல் »
இந்திய புராண வழக்கில் மகாபாரதம் எப்படியோ அப்படியே ஹோமரின் இலியத் - ஒடிஸ்ஸே. ஏறத்தாழ இலியமும் பாரதமும் கொண்டுள்ள ஒருமித்த கருத்துகள் வியப்பாக உள்ளன. பாரதப் போரின் தொடர்ச்சியாக ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் கதைகளில் உள்ள ஆன்மிக வாசனையை ஒடிஸ்ஸேயின் தொடர்ச்சியில் காண்பதரிது. சோகரசங்களில் ஒற்றுமை காணப்படும். பாரதப் போருக்குப் பின் அபிமன்யுவின் மகன் பரீட்சித்து மரணம் ஒரு சோகம். மகாபாரதத்தில் போர் முடிந்தபின் சாந்தி பருவ நிகழ்ச்சிகளுக்கும் இலியம் - அதாவது ட்ரோஜன் - கிரேக்க போருக்குப்பின் ஒடிஸ்ஸேயில் விவரிக்கப்படும் நிகழ்வுகளுக்கும் உள்ள ஒற்றுமைப்பண்புகள் கவனிக்கத்தக்கன. ஆனால் மிகமிக வித்தியாசமான சோகத்தை ஆடிப்பஸ் சித்தரிக்கிறது.
ஐரோப்பாவில் இடைக்கால கவிஞர்களை மிகவும் கவர்ந்த பல்வேறு கிரேக்க சொகக்கதைகளில் இரண்டை மட்டும் தேர்வு செய்து கவனிக்கலாம். முதலாவது ஆடிப்பஸ். இரண்டாவதாக நாம் கவனிக்க இருப்பது ஈராஸ் - ஸைக்கே.
ஹீராக்ளீஸ், டையோனைசஸ் …
இறையியல் »
கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த தெய்வக்கதை மற்ற கிரேக்க புராணங்களிலிருந்து மாறுபட்டு விளங்குகிறது. அபூலியஸ் பிளாட்டோவின் சீடர். பிளாட்டோவை ஒரு பகுத்தறிவாளராகக் கருத இயலாது. அவர் புறப்பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் உயர்ந்த குறிக்கோள்வாதி என்றாலும், உயர்ந்த குறிக்கோளின் உன்னத நிலையை அழியாத ஆன்மாவாக ஏற்றுக் கொண்டவர். மேலோட்டமாகப் பார்த்தால் பிளாட்டோவோ, அபூலியஸோ கண்ணால் பார்க்க முடியாத இரவுப் பிராணியுடன் மானுடப் பெண் உறவு கொள்ள முடியும் என்பது அறிவுக்குப் பொருந்தாது என்றாலும் சில உண்மைகளை மனித உணர்வுகளுடன் வெளிப்படுத்த தெய்வங்களைக் கையாள்கின்றனர்.
இறையியல், தொடர்கள், தொன்மம் »
தம் வளர்ப்புப் பெற்றோர்கள்தான் தன் தாய் தந்தையர் என்று நம்பி வளர்ந்து ஆளாகிறான் ஆடிப்பஸ். ஆனால் ஒரு குடும்பத் தகராறில் அவனது பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டு விடுகிறது. ஆடிப்பஸ் தன் பெற்றோரைத் தேடிச் செல்கிறான். கொரிந்த் நாட்டை விட்டு வெளியேறும் ஆடிப்பஸ் ஒரு நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு பல கிராமங்கள் நகரங்கள் தேசங்கள் என்று தன் தேடலைத் தொடர்கிறான். தன் பயணங்களில் டெல்ஃபி என்ற ஊர் வந்து, அங்கு அருள்வாக்கு கேட்கும்போது “விரைவில் நீ உன் தந்தையைக் கொன்று தாயைத் தாரமாக்கிக் கொள்வாய்” என்று பதில் வந்தது.
இறையியல் »
கிரேக்க ஓடிஸ்ஸஸ் லத்தீன் வழக்கில் யூலிஸ்ஸஸ் ஆயிற்று. ஆங்கில கவிஞர், டென்னிஸனா எபைரனா என்று சரியாக நினைவுக்கு வரவில்லை, யூலிஸ்ஸஸ் ட்ராயிலிருந்து ஊர் திரும்பும்போது ஃபாசி என்ற தீவில் போதை மயக்கத்தில் சிக்கிக்கொண்ட விவரத்தை மையமாக வைத்து ‘லோட்டஸ் ஈட்டர்ஸ்’ என்ற கவிதை எழுதியிருக்கிறார். நயமான கவிதை. இலியத் போர் முடிவுற்றபின் ட்ராயிலிருந்து ஓடிஸ்ஸஸ் தன் சொந்த தேசமான இதாகாவுக்குத் திரும்பிய கதை இலியத் காவியத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.
இறையியல் »
ட்ராய் வெற்றிக்குப்பின் கிரேக்க வீரர்கள் கப்பல்களில் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தனர். கப்பல்கள் யூபோயோ தீவுக்கு வந்தபோது நாப்னையஸ் நள்ளிரவில் தன் நண்பர்களுடன் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினான். அவற்றில் இருந்த கிரேக்க வீரர்களும் எரிந்து சாம்பலாயினர். ஆனால் மெனலாஸ், அகமெம்னான், ஒடிஸ்ஸஸ் மூவரும் ட்ராயில் தங்கிவிட்டதால் உயிர்தப்பினர். அவர்களை விதி வேறுவிதமாக தண்டித்தது.
இறையியல் »
ஸீயஸ் மனம் குளிரும்படி ஸீயஸ்ஸுக்கு யாகம் நடத்தினார். நிறைய பலிகளை வழங்கினார். ஸீயஸ் மனம் மகிழ்ந்து நல்ல சகுனங்களைத் தோற்றுவித்தார். யாகம் நிகழ்ந்தபோது, ஹோம குண்டத்திலிருந்து ஒரு சர்ப்பம் வெளிவந்து அருகில் உள்ள மரத்தில் மேல் சென்று தாய்ப் பறவையையும் அதன் ஏழு குஞ்சுப் பறவைகளையும் உண்டுவிட்டு கீழிறங்கி கல்லாய் மாறியது. இதற்கு விளக்கம் அளித்த கல்காஸ், இலியத் முற்றுகை பத்தாண்டுகள் நிகழும் என்றும், ட்ரோஜன்கல் மடிவர் என்றும் இறுதி வெற்றி கிரேக்கர்களுக்கே என்றார்.
இறையியல் »
பாம்புப் பற்களை உழுத வயலில் விதைத்ததும் நாகாசூரர்கள் மண்ணிலிருந்து வெளிப்பட்டு ஜேசனைத் தாக்கத் தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய ஜேசன் ஒரு புதரின் மறைவில் ஒளிந்து நின்று கற்களைக் கொண்டு திருப்பித் தாக்கினான். தாக்குதல் எங்கிருந்து நடைபெறுகிறது என்று குழப்பமடைந்த நாகாசூரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு மரணமடைந்தனர்.
இறையியல் »
கிரேக்க இலக்கியத்தில் வீர சாகசக் கதைகளில் ஜேசனும் ஆர்கோநாட்ஸும் மிகவும் சுவை நிரம்பியது. ஹெலன் ஆஃப் ட்ராய் போல் ஜேசன் அண்ட் த ஆர்கோநாட்ஸ் என்றொரு ஹாலிவுட் திரைப்படம் அந்த நாளில் வந்திருக்கிறது.அயோல்கஸ் நகரை ஆண்டு வந்த ஏசன் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறான். க்ரீத்தியாவுக்கும் டைரோவுக்கும் பிறந்த ஏசனின் தாய்மீது மோகம் கொண்ட பாசிடான், பீலியஸ் என்ற மகனையும் டைரோவுக்கு வழங்கினான். பீலியஸ் தன் அண்ணனைக் கொன்று அவனது அரசைக் கைப்பற்றி ஏசனின் மகனான ஜேசனை அனாதையாக்கினான்.
இறையியல் »
இறையியல் »
இறையியல் »
இறையியல் »
இறந்தவர்களின் ஆன்மாக்கள் ஹேடஸ் நரக சாம்ராஜ்ஜியத்தில் நீதி விசாரணைக்கு ஆளாகின்றன. மூன்று நீதிபதிகள் கொண்ட டிரிப்யூனல் - அதாவது மைனாஸ், அயாக்கஸ், ராடமைந்தஸ் ஆகிய மூவரும் தீர்ப்பு வழங்கும் உரிமை உள்ளவர்கள். வரலாற்றில் ராடமைந்தஸ் பெயரில் கோட் ஆப் க்ரீட்டன் லாஸ் என்று புராதன கிரேக்க நகர அரசுகளில் நீதி பரிபாலனச் சட்டங்களாகச் செயல்பட்டன.
இறையியல் »
பாசிடான் ஸீயஸ்ஸின் அண்ணன். மண்ணுலகையும் விண்ணுலகையும் ஸீயஸ் ஆண்டான். ஆழி சூழ் உலகைப் பாசிடோன் ஆண்டான். சமுத்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவன் பெற்ற விதிப்பயன். சிறுவனாயிருந்தபோது அவன் டெல்சைனஸ் பொறுப்பில் விடப்பட்டான். டெல்சைனஸ் உலோகங்களை வளைத்து ஆயுதங்களைச் செய்வதில் வல்லவன்.டெல்சைனஸின் தங்கை ஹலியாவைப் பாசிடான் மணந்துகொண்டு ஆறு புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் பெற்றுக் கொண்டான். அப்புதல்வியின் பெயர் ரோடஸ். அதே பெயரில் அவன் நினைவாக கிரேக்கத் தீவு உண்டு.
இறையியல் »
இலியத் போரில் சாகசம் புரிந்த பெண் வீராங்கனைகளில் அமேசான் அரக்கியர் பிரபலமானவர்கள். இவர்களின் வீரத்திற்குக் காரணம் ஆர்ட்டமிஸ் மீது கொண்ட அளவுகடந்த பக்தியே. அன்றைய ஆசியாமைனரில் எஃப்சஸ் என்ற இடத்தில் இவர்கள் ஆர்ட்டமிசுக்குக் கோவில் கட்டி வழிபட்டனர். பின்னர் ரோமானியர்களால் வெல்லப்பட்ட பின்னர் ஆர்ட்டமிஸ் தெய்வத்தை ரோமானியர்கள் டயானா என்ற தெய்வமாக அடையாளப்படுத்தி வணங்கினர்.




