முகப்பு » தொகுப்பு

கல்வி பகுதியில் பிற ஆக்கங்கள்

பாலியல் கல்வி »

நான் வளர்கிறேனே மம்மி

உள்ளே போனதும், சட்டையைக் கழற்றி, தன் கையை உயர்த்தி, அக்குளைக் காட்டியது. “முடி முளைச்சிருக்கா?” எனக்குப் புரிந்துவிட்டது. வெளியே வந்து, “இவுங்களுக்கும் growing up classes நடக்க ஆரம்பிச்சிருச்சா?” என்றேன் விஜியிடம். “ஆமா, நாலு நாளா ஒரே இம்சை.”

கல்வி, சமூகம் »

அந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா?

மத்திய கேபினெட், அந்நிய நாட்டின் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்தான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அடுத்து நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவு வைக்கப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

இது தொடர்பாக ஒரு கேள்வி-பதில் விவாதம்.

லாபம் இல்லை என்ற நிலையில் மூவர் மட்டுமே கல்வித் துறைக்குள் வருகிறார்கள். ஒருவர்: அரசு. இரண்டாமவர்: மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற தர்ம சிந்தனையுள்ள தனி மனிதர்கள், அறக்கட்டளைகள், மத அமைப்புகள். மூன்றாமவர்: திருடர்கள், பொறுக்கிகள், அரசியல்வாதிகள். இந்த மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். ஜாலியாக சட்டத்தை ஏய்த்து, பணத்தை கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை என்று மாற்றி உள்ளிருந்து வெளியே எடுத்துவிடுகிறார்கள். இந்த மூன்றாம் நிலையில் இருப்பவர்கள்தான் இன்று அதிகமாக கல்வியில் நுழைகிறார்கள்.
லாபம் செய்யலாம் என்ற நிலை வரும்போது நியாய சிந்தனை உள்ள பலரும் கல்வித் துறையில் நுழைவார்கள். திருடர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.