முகப்பு » தொகுப்பு

இலக்கியம் பகுதியில் பிற ஆக்கங்கள்

கவிதை »

கவிதைகள்

ஆலமரத்திலிருந்தன
ஆயிரம் பறவைகள்
ஒன்றைச் சுட்டான் குறவன்
எஞ்சியவைகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

ஆளுமை, இலக்கியம் »

சி சு செல்லப்பா - தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு - நிறைவுப் பகுதி.

வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன? இருப்பார்கள் தான் - அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை காந்தி பக்தராகவே இருந்ததும் தவிர அவர் வாழ நினைத்தது ஒரு எழுத்தாளராக. எழுத்தாளராக வாழ்வது சாத்தியமாகத்தான் அவர் சென்னைக்கு வந்ததும். அவர் பழகியதும் உடன் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததும் எழுத்தாளர்களோடு தான். சிறு கதைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. க.நா.சு. அந்த காலகட்டத்தில் விமர்சனத்தின் தேவையை வலியுறுத்திப் பேசி வந்த காலத்தில் எல்லாம் அவர் பிச்ச மூர்த்தி போல், இன்னும் மற்ற சக எழுத்தாளர்கள் போல் அதை ஏற்க மறுத்தே வந்திருக்கிறார். க.நா.சு. குளவியாகக் கொட்டிக் கொட்டித் தான் செல்லப்பாவும் குளவியானார்.

ஆளுமை, இலக்கியம் »

‘லா.ச.ரா’ - எஸ்.ரங்கராஜன்

இன்னா செய்தாரை என்னவோ செய்தல் பற்றி ஒருத்தர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ராமாமிருதத்தின் கவனம் எங்களிடமிருந்து மெதுவாக நழுவுகிறது. எங்கள் கோஷ்டியில் சேர்ந்துகொண்ட நண்பரின் 5 வயது பெண்ணை அடர்த்தியான புருவங்களின் நிழலில் இருக்கும் தன் சௌகர்யமான பூனைக் கண்களால் பார்க்கிறார். “அவரை வரைவது சுலபம் என்று நினைக்கிறேன். She seems to be all lines”.

இலக்கிய விமர்சனம், இலக்கியம் »

நூற்கடலின் கரையில்…

மிகத் துரிதமாக நடக்கும் கதை. ஆனால் செல்லப்பாவுக்கு இக்கதையின் மேல் உள்ள முழுப் பிடியின் காரணமாக வெளிப்பார்வைக்குச் சாதாரணம் எனத் தோன்றும் மொழியில், கதையின் அவசரம் ஆசிரியனைத் தொற்றாமல், சிறு சிறு வேக வார்த்தைகளாலான செயற்கை உத்வேகங்கள் இன்றி, தவ்வாத மொழியில், தவ்வலைச் சொல்லும் சர்வ நிச்சயம் உள்ள எழுத்து. போதை தரும் கதைக் கரு, களம். அதில் கம்பீரமாக செல்லப்பா நடை போடுகிறார். பதற்றம் கொள்ளாத, அவசரம் இல்லாத மொழியில் எழுதப் பட்ட சாகசக் கதை

இலக்கிய விமர்சனம், கட்டுரை, புத்தகவிமர்சனம் »

நெடுங்காலமாகத் தொடரும் அரண் - ராபர்ட்டோ பொலானோ

ராபர்ட்டோ பொலானோவைப் பொறுத்தவரை கவிஞர்களது உலகம் என்பது ஒரு உயிருள்ள மிருகம் போன்றது. ஆயிரம் கைகளும், பல்லாயிரம் சிந்தனைகளும் ஒன்றாக இயங்கி ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்யும் இயந்திரம். கவிதையின் உள்ளடக்கமும் உருவமும் அதில் மட்டும் முடிவதில்லை. கவிஞனின் உலகத்துள்ளும் ரசனையின் மிச்சங்கள் அடங்கியுள்ளன.

இந்தியக் கவிதைகள் »

இந்தியக் கவிதைகள் - கன்னடம் - மம்தா சாகர்

என் கைகளை வீசினால்
நதி துளிகளாகச் சிதறி
வானம் மேகம் சூரியனாக
என் மேல் தெறிக்கிறது

உலகச் சிறுகதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு »

சின்ன விஷயங்கள்

குழந்தை முகம் சிவக்க அலறி அழுதது. அவர்களின் சிறிய கைகலப்பில் அடுப்பிற்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பூச்சட்டியைக் கீழே தள்ளிவிட்டார்கள். அவன் அவளைச் சுவரோடு சேர்த்து அழுத்தி, அவள் பிடியை விடுவிக்க முயன்றான். குழந்தையை பிடித்துக்கொண்டு அவளை முழுபலத்தோடு தள்ளினான்.

சிறுகதை »

நம்பிக்கை

உடன் பிறந்தவர்கள் நான்கு பேரிலும் பெண் குழந்தை உள்ள ஒரே குடும்பம் இவருடையது தான். ஒரு கோழி குஞ்சை போல் அத்தனை சிறியதாக, வெதுவெதுப்பாக இருந்த பிறந்த குழந்தையை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பே கண்ணாக இரு கைகளிலும் ஏந்தி மனம் பொங்க நின்றார். இத்தனை சிறிய உயிருக்கு இவ்வளவு கனம் இருக்க முடியுமா? கனம் அதன் உடலில் இல்லை.குவிந்த அவர் கவனத்தில் இருந்திருக்க வேண்டும்.

கவிதை, மொழிபெயர்ப்பு »

எரிமலையில் தொலைந்த காதலன் - இருந்தும், தொலையாத காதல்

ஒவ்வொரு துணுக்கையும்
குளிர்ந்த நீலப் பீங்கான் கிண்ணத்தில் சரித்து
பழச் சாறு குளமாய்த் தேங்க முழுப்பழத்தையும்
அதன் தோலினின்று பிரித்து
அதன் பின்பே அதை உண்பது.
எத்தனை இனிமையான
ஓர் ஒழுங்கு
துல்லியமாய் அர்த்தமற்றதாய்

சிறுகதை »

பயம்

மனித மனம் விசித்திரமானது. சிலரைப் பார்த்ததும் உடனே பிடித்துவிடும். சிலரைப் பார்த்ததும் காரணமே இல்லாமல் எரிச்சல் வரும். அந்த இளைஞனின் நிதானமும், பணிவும் கண்டுச் சுந்தருக்கு அவனைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் சுந்தருக்கு இப்போது எரிச்சல்தான் வந்தது. காலங்காலையில் வந்துத் தொந்தரவு செய்கிறானே என்ற எரிச்சல். ஏதாவது நன்கொடை என்று கேட்டால் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடவேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.

கவிதை »

கவிதைகள்

எதிலும்-
முளைத்தெழ
மழைக்காக
காத்திருக்கும் விதையென
அடிநெஞ்சில் உறங்கும்
உன் விழிகள்.

சிறுகதை »

கனவு

அபி, கூடத்தின் கருங்கல் தரையின் மேல் கால் மீது கால் வைத்து ஆட்டியபடியே படுத்திருந்தாள். அவள் ‘ப்ளே ஸ்கூலி’லிருந்து கொண்டு வந்த பையும் தண்ணி பாட்டிலும் அவள் கையருகே இருந்தன. அவளுக்கு மிக அருகில் தாழ இறங்கிய இரும்பு கட்டிலில் எம்.வி.மாமா படுத்திருந்தார். இந்த தூங்கும் நேரம் இன்னும் எத்தனை மணி நீளும் என்று அபி யோசித்துக்கொண்டிருக்கையிலேயே…

இந்தியக் கவிதைகள், மொழிபெயர்ப்பு »

இந்தியக் கவிதைகள் - இந்தி - ஜ்யோத்ஸ்னா மிலன்

பாதங்கள் ஒருபோதும்

கற்பனை செய்ததில்லை

அவை ஒருநாள் சிந்திக்கத் தொடங்குமென்று.

ஆளுமை, இலக்கியம் »

சி.சு.செல்லப்பா - தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு - பகுதி 9

அவர் படித்த காலத்திலிருந்து புயலாக வீசிய விடுதலைப் போராட்டத்தில் அவரைச் சுற்றிய எல்லோரும், அதில் கலந்து கொண்டவர்கள். அவரும் தான். படிப்பை விட்டு சிறை சென்றவர். அந்த உணர்வு, காலமும் வெளியே நாட்டு மக்களும் மறந்தாலும், அவரிடம் நான் பார்த்த எண்பதுக்களிலும் கூட அவரிடம் உயிர்ப்புக்கொண்டிருந்தது. வெளியே ஓட்டு கேட்டு போகும் ஊர்வலத்தைப் பார்த்ததும் தன் வீட்டு நடை பாதையிலிருந்தே,” என் வோட்டு உங்களுக்குத் தான்” என்று உற்சாகத்தோடு சத்தம் போட்டுச் சொன்னதை நான் உடன் இருந்து பார்த்தவன். எனக்கு அப்போது கொஞ்சம் அதீதமாகத் தான் பட்டது. செல்லப்பாவின் அந்த ஆளுமை அதீதம் என்று தான் சொல்ல வேண்டும்.

சிறுகதை »

நந்தாதேவி

அங்கு ஒரு ஓநாய் என்னையே வெறித்துப் பார்த்திருந்தது. சேற்றில் மூழ்கி எழுந்தது போல உடல் முழுவதும் சடை சடையாக அடர்ந்த கரிய முடி. முழுவதுமாக மூடாத வாய். பற்களிலிருந்து கோழை வழிந்தது. தலையில் அடிபட்டது போல உறைந்த ரத்தச் சிகப்புக் கட்டிகள். எனது கால்கள் பின்வாங்கத் தொடங்கின. உடனடியாக திரும்பி ஓடிவிடக்கூடாது. உயிர் தப்பாது. ஓநாய்க்கு ஆபத்தில்லை எனும்படியாக எனது ஒவ்வொரு உடலசைவும் இருந்தாக வேண்டும்.