அஞ்சலி பகுதியில் பிற ஆக்கங்கள்
அஞ்சலி »
இன்று காலை அவரது எண்பத்து இரண்டாவது வயதில் P.B.ஸ்ரீனிவாஸ் இறந்துவிட்டார் எனும் செய்தியை இணையத்தில் பார்த்து அறிந்துகொண்டேன். பலவிதமான நினைவுகள். யூடியூப்பைத் திறந்துவைத்து அவரது எந்தப் பாடலைக் கேட்கலாம் என குழம்பியபடி ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்தேன். நெடுங்காலம் பல அற்புதமானப் பாடல்களைப் பாடியிருந்தாலும், பாடல் வரிகளைத் தாண்டி அவரது குரல் இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது.
அஞ்சலி, ஆளுமை, இசை »
சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
அஞ்சலி, வீடியோ »
சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் இவ்வாண்டு டிசம்பர் 11ம் தேதியன்று தனது 92வது வயதில் காலமானார். இந்திய செவ்வியல் இசையை உலக அளவில் எடுத்துச் சென்று அதன் நவீன பரிமாணங்களும் வெளிப்படக் காரணமாக இருந்த இந்த தலைசிறந்த இசைக்கலைஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெருஞ்சோகம். பண்டிட் ரவிசங்கரின் மறைவுக்கு சொல்வனத்தின் அஞ்சலி.
அஞ்சலி »
ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்தது பெரும் சலனங்களை ஏற்படுத்தியிராவிட்டாலும் கூட, ஐரோப்பாவின் மாபெரும் தொழிற் புரட்சிக்குப் பின்னால் மனித குலம் சாதித்த மாபெரும் சாதனை, மனிதன் நிலவில் கால் பதித்த அந்தத் தருணமே. ஒவ்வொரு முறை முழு நிலவைக் காணும் பொழுது மனம் அடையும் பரவசத்துடன் கூடவே, அதே நிலவில் முதன் முதலாகக் கால் பதித்த மனிதனின் நினைவும் நிலைத்து விட்டது.
அஞ்சலி, ஆளுமை »
எழுத்தாளர், சாதனையாளர் ரா.கி.ரங்கராஜன் இன்று (18-08-2012) காலமானார். இந்த தருணத்தில் சொல்வனம் ஆசிரியர் குழு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது: பல முறை அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தாலும் ஒரே ஒரு முறைதான் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவரிடம் பல நாள் பேசியது போன்ற உணர்வு. 80+ வயதிலும் மூன்று மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
அஞ்சலி »
இப்போது ஜாப்ஸின் உரையை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டேன். எங்கே போனாலும் ஒரு notepad-டும் அதற்குள் இந்த உரையும் இருக்கும். எதோ ஆராய்ச்சிக் கட்டுரை படிப்பது போல்
படித்துக் கொண்டிருப்பேன். சென்ற வருடத்தில் மட்டும் பல முறை அதை படித்திருக்கிறேன். எப்போதெல்லாம் என்னுடைய எண்ணம் சரியான திசையில் இல்லை என்று உணர்ந்தேனோ அப்போதெல்லாம் அந்த தாளை எடுத்து படிக்கத் தொடங்கிவிடுவேன். மனம் நிலைப்படும்.
அஞ்சலி »
கு.ப.ராவின் ஒரு பெரிய குணத்திற்கும் இந்தக் கரிச்சான் காதலுக்கும் சம்பந்தமுண்டு. இளம் எழுத்தாளர்களுக்கு அவர் பெரிய ஆதரவாக இருந்தார். அவர்கள் எழுதி வாசித்துக் காட்டிய ஆயிரக்கணக்கான கட்டுரை, கதைகளை அலுப்பில்லாமல் சுணங்காமல் கேட்டுத் திருத்தங்களைச் சூசித்துக் கொண்டே இருப்பார். இந்த இளம் ஹிருதயங்களை முன்னுக்குக் கொண்டு வந்த ஆர்வம் கரிச்சானையும் முன்னுக்குக் கொண்டு வந்தது. ஆனால் கரிச்சானைத் திருத்த வேண்டிய அவசியம் மட்டுமிருக்கவில்லை. அது பிறக்கும்போதே மகாவித்வானாகத்தான் பிறக்கிறது.
அஞ்சலி »
சரியாக இனம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் தமிழ் இலக்கியச் சூழலில் தீர்க்கமான கலையுணர்வு இருந்திருக்குமானால் மோகமுள் எழுதிய கைகளுக்கு முதல் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில், இன்றைய தமிழ்நாட்டில் அது அமிழ்ந்திருக்கும் ரக அறிவார்த்த கலைச்சூழலில் எந்த ஒரு கலைஞனும் அறிவாளியும் சிலுவை சுமக்கப் பிறந்தவன்தான். தி.ஜானகிராமன் அதிர்ஷ்டவசமாக, அல்லது அவருக்கிருந்த அவர் எழுத்துக்கிருந்த இனிமை, கவர்ச்சி காரணமாக அவருக்கிருந்த அடங்கிப்போகும் சுபாவம் காரணமாக சிலுவை சுமக்க நேர்ந்ததில்லை.
அஞ்சலி »
அஞ்சலி »
சென்ற புதன் கிழமை, 4.5.2011 அன்று மறைந்த கி.கஸ்தூரி ரங்கன் தமிழ் இதழ் வரலாற்றில் மறக்கப்பட முடியாத பங்காற்றியவர். தி.ஜானகிராமன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியவர்களுடன் இணைந்து கணையாழி இதழைத் துவங்கிய நாள் முதல் அவர் தன் பணத்தில்தான் இதழை நடத்தியிருக்கிறார். சுஜாதாவின் “கடைசி பக்கங்கள்”, தி ஜானகிராமன், ஆதவன், போன்றவர்களின் முக்கியமான நாவல்கள் கணையாழியில் வெளிவந்துள்ளன.
அஞ்சலி »
விஜய பாஸ்கரன் முற்போக்கு குழாத்தில் அடையாளம் காணப்படுபவர். சரஸ்வதி பத்திரிகையில் அதிகம் எழுதுபவர்கள் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். பத்திரிகையும் ஜனசக்தி அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியினராலும் மற்ற முற்போக்கு எழுத்தாளர்களாலும் மிகவும் மதிக்கப்படுபவர் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் லிட்டரரி கமிஸாராக அதிகாரம் வகித்து வந்த, கொஞ்சம் மென்மையாகவும், நம் மரபு ஒழுகியும் சொல்வதென்றால் தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு கொள்கை வழிகாட்டும் குரு எனச் சொல்லத்தக்க அந்த சிதம்பர ரகுநாதனை எழுத்து பத்திரிகையில் சமீபத்தில்தான் நான் மிகவும் கடுமையாகவும் கிண்டலாகவும் எதிர்த்து எழுதியிருந்தேன். அந்த சாமிநாதனையாக்கும் விஜய பாஸ்கரன் சரஸ்வதியில் எழுதச் சொல்கிறார். இது தகுமா ஒரு முற்போக்கு பத்திரிகையாளருக்கு?
அஞ்சலி, இசை »
தஞ்சாவூர் பாணியின் மிகச் சிறந்த கலைஞர். தஞ்சாவூர் பாணியில் வீணையைப் பொருத்தவரையில் கமகங்களின் சுத்தம், கமகங்களை வாசிக்கும் வழிமுறைகள், உத்திகள் இவற்றை அனுபவபூர்வமாக நன்கு கற்றறிந்தவர். அவர் வாசிக்கையில் பல முறை அவரே பாடியும் வாசித்திருக்கிறார். பல சமயம் அப்படிப் பாடாமல் இருக்கும் நேரத்திலும் நமக்கு யாரோ உடன் பாடுவது போலவே தோன்றும். ‘காயகி முறை’ எனப்படும் வாத்தியத்தில் வாய்ப்பட்டைப் போன்றே ஒலிக்க வைக்கும் நேர்த்தியை அவர் செவ்வனே அறிந்திருந்தார்.
அஞ்சலி, இசை, பேட்டி »
தஞ்சை இசைச்சூழல் தமிழகத்தின் தொன்மையான கலாசாரப் பின்னணியை உயிர்ப்போடு வைத்திருந்த ஒன்று. தஞ்சை இசைச்சூழலில் எஞ்சியிருந்த வளமான இசைக்கலைஞர்களில் ஒருவரான தஞ்சை வெங்கடேசய்யங்கார் சென்ற வாரம் தன்னுடைய 85-ஆவது வயதில் மறைந்தார். அவரைக் குறித்தும், தஞ்சை இசைச்சூழலைக் குறித்தும், தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்ட தஞ்சை K.சிவசுப்ரமணியன் அவர்களிடம் ஒரு பேட்டி கண்டோம்.
அஞ்சலி, இசை, ரசனை »
வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான்.
அஞ்சலி »
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, என் கைபேசியில் இருக்கும் எண்களைச் சரிபார்க்கும் போது எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்ற பெயர் பார்த்து, “அட இவரிடம் பேசி ரொம்ப நாள் ஆச்சே. பேச வேண்டும்” என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் பேசவில்லை. “பேசியிருக்கலாமே” என்று இனி ஆயுளுக்கும் வருத்தப்படப்போகிறேன். இலக்கியச் சர்ச்சை, மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தேவையில்லாத விமர்சனம் போன்றவை அவரிடம் கிடையாது. அவருடன் பேசிய சமயங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். அவருடையவை, தொப்புள் சமாசாரம் இல்லாத இதழ்களில் பெரும்பாலும் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் வகைக் கட்டுரைகளும், nostalgia-வையும் சார்ந்தவை.




