ஆன்மீகம் பகுதியில் பிற ஆக்கங்கள்
ஆன்மீகம், தத்துவம், பௌத்தம் »
“ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா?”
ஆன்மீகம், பௌத்தம் »
பாலி மொழியில் புதைந்திருந்த பல பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நவீன உலகிற்கு ஈந்த டி.ரீஸ் டேவிட்ஸ் “மிலிந்த பன்ஹா” பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் : “இந்திய உரைநடையின் தலைசிறந்த படைப்பு “மிலிந்த பன்ஹா” என்று நான் நினைக்கிறேன். இலக்கிய கண்ணோட்டத்தில், உலகின் எந்த நாட்டிலும் படைக்கப்பட்ட இவ்வகைக்கான புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம் இது”
ஆன்மீகம் »
திருக்கோட்டியூர் நம்பி பிறந்து இன்றைக்கு 1024 ஆண்டுகள் ஆகின்றன. இவருடைய இயற்பெயர் திருக்குருகைப்பிரான். குருகேசர் என்றும் அழைப்பர். ஆளவந்தார் பிறந்து பதினோரு வருடங்களுக்குப்பின் பிறந்தவர். இராமானுஜரிடம் அளவு கடந்த அன்பு கொண்டவராக விளங்கியவர். எப்போது எல்லாம் இராமானுஜரைக் காணவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போதெல்லாம், “நான் கோயிலுக்குச் சென்று வருகிறேன்” என்று வீட்டில் சொல்லிவிட்டு திருவரங்கத்தில் இராமானுஜரை சந்திக்கச் சென்றுவிடுவாராம்.
அனுபவம், ஆன்மீகம் »
ராஜவீதி என்னும் கடைத்தெருவில் திருவிழாக் கூட்டம். முதலில் என் கண்களில் பட்டது இனிப்புக்கடைதான். செங்கலை விடக் கொஞ்சம் பெரிசாக மைசூர் பாக் இருப்பதைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவரிடம் ஒரு மைசூர் பாக் என்ன கிலோ இருக்கும் என்று கேட்க நினைத்துக் கிட்ட போக உடனே அவர் நான் ஏதோ வாங்க வந்திருக்கும் கஸ்டமர் என்று நினைத்து, நம்ப மாட்டீர்கள், ஒரு பாதி மைசூர் பாக்கை என்னிடம் சாம்பிளுக்குச் சாப்பிடக் கொடுத்தார். பயந்து கொண்டு ஓடிவிட்டேன்.
ஆன்மீகம், உயிரியல் »
குகைக்குப் போய்க் கல்லால் அடைத்துக்கொண்டு மாதக் கணக்கில் தனியாக உட்கார்ந்திருந்தால், புற உலகத்தின் எல்லாக் காட்சிகளும் செய்திகளும் - பற்பசை விளம்பரங்கள் உட்பட - ரத்தாகி, மனத்திற்கு அதிக பட்ச சலிப்பு (boredom) ஏற்படுகிறது. அந்த நிலையில் க்ளூக்கோஸ்-ஆக்ஸிஜன் பற்றாக் குறையும் சேர்ந்துகொண்டு மனம் கெக்கரே பிக்கரே என்று கற்பனை செய்து கொள்ள, கண் எதிரே சங்கு சக்கர உருவங்கள் தெரிந்தாலும், அசரீரிக் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.
ஆன்மீகம், சமூக வரலாறு »
ஆரியர் என்கிற தந்தை-வழி சமுதாயத்தின் ஆண் தெய்வங்கள் கொண்ட வேதங்கள், அதன் அடிப்படையிலான பண்பாடு எனும் கருத்து ஒரு புறம்; திராவிடத் தாய் வழி சமூகம்- தாய் தெய்வ வழிபாடு மறுபுறம் என்ற கருத்து மறுபுறம். இப்படி ஒரு இரு துருவத்தில், binary இல்தான் நம் பார்வை தொடங்கி, பிறகு ஒரு ஒருமையைத் தேடுகிறது. எனவே எந்த இந்து மரபிலும் இந்த இரட்டையைத் தேடப் பழக்கப்பட்டுவிட்டோம்.
அனுபவம், ஆன்மீகம் »
நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார். அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.




