முகப்பு » தொகுப்பு

மறுவினை பகுதியில் பிற ஆக்கங்கள்

மறுவினை »

வாசகர் மறுவினை

ஆரவார அரசியல், பகட்டான அடிமைத் தொழில் மோகம் என்று பலரும் சிந்தையற்றுக் கிடக்கையில் சிந்திக்க வைக்கின்ற கட்டுரை. இக்கட்டுரை ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

மறுவினை »

வாசகர் மறுவினை

சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய ‘மணியம் செல்வன்’ சிறுகதை மிக நன்றாக இருந்தது. வர்ணணைகள் அனைத்தும் அருமை. மன ஓட்டத்தை அப்படியே படம் பிடித்து அவருடன் கூடவே பயணம் செய்தவர்போல உணர வைத்துவிட்டார். படைப்புகள் தொடர்ந்து எழுதவேண்டும்.

மறுவினை »

வாசகர் மறுவினை

திரு பிரகாஷ் சங்கரனின் கட்டுரை தெளிவான மொழியில் மிகக் கடினமான ஒரு பொருளை திறமையுடன் தந்திருக்கிறது.

தமிழில் இத்தகைய கட்டுரைகள் தேவைகள் அதிகம், ஆனால் அரிதாகவே வருகின்றன. சமீபத்தில் ஒரு புத்தகத்தில் moving bodies என்ற ஆங்கிலச் சொற்கள் ‘இயங்கும் உடல்கள்’ என மொழிபெயர்க்கப்பட்டிருந்தன!

‘அடியிலிருந்து ஒளியூட்டுவது’ என்பது மிகப் பொருத்தமான சொற்றொடர். மொழிக்கும் அடியிலிருந்து ஒளியூட்டுவது மிகவும் அவசியம்.

மறுவினை »

வாசகர் மறுவினை

குமரன் எழுதிய “இசைபட வாழ்…”,அவரே குறிப்பது போல், நினைவுகளில் தோய்ந்த வண்ண ஓவியம் இதையே மீண்டும் மீண்டும் வாசிக்கையில், இதன் வடிவும் வண்ணமும் புதுப்புது முகம் காட்டும்.

மறுவினை »

வாசகர் மறுவினை

உயிரின் அடிப்படை அலகான செல்கள் புதிய செல்களைத் தோற்றுவிப்பதற்காகப் பிளந்து பெருகுவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. புற்றுநோய்களில் செல்கள் இந்த ஆதாரமான கட்டுப்பாட்டை மீறி முடிவற்று பிளக்க ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களில் இந்த கட்டற்ற செல் பிளவு உண்டாகும் போது அது இரத்தப் புற்றுநோய் எனப்படுகிறது.

மறுவினை »

வாசகர் மறுவினை

நான் இங்கிலாந்தில் பார்த்த கிளப் மாட்சுகளிலும் செம்ஸ்போர்ட் மைதானங்களிலும் இந்த மாதிரி காட்சிகள் ஏராளமாக காணக் கிடைக்கும். கையில் புத்தகங்கள், சூரிய ஒளி க்ரீம்கள் பூசிக்கொண்டு, வழிய வழிய பீர் கோப்பைகள், குடும்பத்துடன் மாட்ச் பார்க்க வருவார்கள். தாத்தாக்களும் பாட்டிகளும் மதிய உணவு இடைவேளை பின் ஆட்டத்தில் அரைக்கண் மூடி… கிரிக்கெட் பார்ப்பது என்பது ஒரு நாள் அனுபவம். இந்த கட்டுரையின் மூலம் சித்தார்த் வைத்தியநாதன் மிகவும் நெருக்கமாகிவிட்டார், அவருக்கு எனது அன்பைத் தெரிவியுங்கள்!

மறுவினை »

வாசகர் மறுவினை

அண்மையில் சொல்வனம் இதழில் நான் படித்தவற்றில் ஆகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று. இணையம் மற்றும் அச்சு ஊடகங்களால் பரபரப்பிற்காக திரிக்கப்பட்டு வெளியிடப்படும் அறிவியலின் தற்கால நிலையையும், அறிவியல் துறையில் இல்லாமலேயே அறிவியலைப் பற்றி எழுதும் அரைபண்டிதர்களைப் பற்றியும் அறிவியல் இயங்கும் விதம் பற்றிய அறிவு இல்லாமல் அங்கலாய்ப்பவர்களைப் பற்றியும் நகைச்சுவையுடன், அண்மைய உதாரணங்களோடு சாட்டையடியாக எழுதியிருக்கிறார் அருண்.

மறுவினை »

வாசகர் மறுவினை

நீங்கள் எடுத்துப் பேசும் பொருள் தமிழ் மொழியில் அதிகப் புழக்கம் இல்லாதது. எல்லா பொருளியச் சிந்தனைகளையும் ஆங்கிலத்தில்தானே நாம் வெளிப்படுத்துகிறோம்! ஆனால் இதனை மிக அழகாகத் தமிழில் கையாண்டுள்ளீர்கள். பல புதிய மொழிபெயர்ப்புக்களைக் கற்றுக்கொண்டேன். “முதலாளித்துவம்” என்ற பயனீடு பொருத்தமற்றது என முன்பே அறிந்து கொண்டு “மூலதனத்துவம்” எனப் பயன்படுத்தி வந்தேன். உங்கள் “முதலியம்” மேலும் பொருத்தம்.

மறுவினை »

வாசகர் மறுவினை

இன்று வெளியான சொல்வனத்தில் க.நா.சு. பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். மைத்ரேயன் கட்டுரை படித்தவுடன் என் கண்களில் நீர் வழிந்தது. மிக நன்றாக எழுதி இருக்கிறார். அந்த தஞ்சை பிரகாஷ் மேற்கோள்கள் மிக அருமை. என்ன ஒரு ஆளுமை.

மறுவினை »

வாசகர் மறுவினை

சொல்வனம் படித்து வருகிறேன்.பல தரப்பான படைப்புகளை நல்ல முறையில் வெளியிடுகிறீர்கள். வாழ்த்துகள். ரமணியின் கவிதையைப் படித்தேன். கற்பூர புகையில் அசையும் அம்மன் படிமம் அருமை. பின்னிருந்தவர்கள் முன்னங்கால்களால் பார்த்ததை சொன்னவிதம் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

மறுவினை »

வாசகர் மறுவினை

முந்தைய இதழ்கள் குறித்து வாசகர்களின் மறுவினை.

மறுவினை »

வாசகர் மறுவினை

சென்ற இதழில் பிரகாஷ் சங்கரன் எழுதியிருந்த கட்டுரை மிக உபயோகமுள்ளதாக இருந்தது. அறிவியல் ரீதியாக துல்லியமான தகவல்கள் மட்டுமல்ல, இந்த மருத்துவ தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம், பக்க விளைவுகள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றை அலசியதும் நன்று.

மறுவினை »

வாசகர் மறுவினை

பிரபஞ்சம் தொடர்பாக நான் கொண்டிருந்த எண்ணக்கரு, தெளிவாகவும் கோவையாகவும் வாசிப்பதற்கு எளிதாகவும் விளக்கி எழுதப்பட்டிருப்பதனைக் காண்கையில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

மறுவினை »

வாசகர் மறுவினை

இது என்ன எல்லாரையும் போல சொல்வனமும் பின்னே ஞானும் என்று தலைப்புப் பஞ்சத்தைப் போக்கிக் கொள்ளத் தரம் தாழ்ந்து விட்டதே என்று ஒரு கணம் துணுக்குற்றேன். ஆனால் பார்த் சுயம் உட்பட அனைத்தையும் பிரதி வாசிப்பாகப் பார்த்தவர் என்று தொடங்கி, போர்ஹே அனைத்து பாத்திரங்களிலும் வாசகன் தன்னைப் பார்ப்பதான புரிதலைத் தருகிறார் என்று சொல்லி, டயர் பார்த் இருந்த இடத்திலிருந்து போர்ஹேவின நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை மைத்ரேயன் எவ்வளவு அழகாக விவரிக்கிறார்.

மறுவினை »

வாசகர் மறுவினை

கடந்த பல பத்தாண்டுகளில், உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதப் படும் எல்லா வரலாற்று நூல்களிலும் பொதுயுகம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். தமிழில் இது பற்றிய அறிதல் இன்னும் வந்து சேரவில்லை போலும். அதனால் பழைய பெயர்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கி.மு, கி.பி, என்பதற்குப் பதிலாக பொ.மு, பொ.பி. என்ற வழக்கை நாம் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். வரலாறு குறித்த எனது கட்டுரைகள் எல்லாவற்றிலும் அப்படித்தான் நான் எழுதி வருகிறேன்.