முகப்பு » தொகுப்பு

மகரந்தம் பகுதியில் பிற ஆக்கங்கள்

மகரந்தம் »

மகரந்தம்

அச்சுப் புத்தகங்கள் நிறைய விற்கின்றன. இன்னமும் விற்கின்றன என்பது அதிசயம்தான் என நிறைய மேற்குலக கருத்தாளர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். அதே நேரம் முன்னெப்போதையும் விட ஏராளமான எழுத்தாளர்கள் இப்போது புத்தகங்களையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதித் தள்ளுகிறார்கள். நிறைய முழு நேர எழுத்தாளர்கள் இப்போதெல்லாம் புத்தகங்கள் எழுதித் தொழில் நடத்த முடியவில்லை, வேறு வேலைகள் செய்தபடி அவ்வப்போது ஒரு புத்தகம் எழுதலாம், அது ஏதோ சில ஆயிரம் பிரதி விற்றால் அதிகம். அதையும் பெரும் பிரசுரகர்த்தர்களிடம் கொடுத்தால் நமக்கு ஏதும் கிட்டுவதில்லை என்கிறார்கள். அதனால் நிறைய எழுத்தாளர்கள் புத்தகங்களைத் தாமே பிரசுரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

மகரந்தம் »

மகரந்தம்

இப்படி பள்ளி மாணவர்களை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள் சில அமெரிக்கப் பல்கலைப் பேராசிரியர்கள். இந்த ஆய்வைப் பற்றிப் படித்தல் நமக்கு வியப்பு கூட எழலாம். இத்தனை எளிய கருத்து, இதை ஏன் வேறு யாரும் செய்யவில்லை?

மகரந்தம் »

மகரந்தம்

கடவுள் மன்னிக்கட்டும், தற்போது இந்தியா யுத்தத்தில் பங்கேற்க நேரிட்டால் அஸ்வினும் ஹர்பஜனும் போர் முனைக்கு செல்லுவார்களா என்பது சந்தேகமே.
ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின் பௌலர் யார்க்ஷையரின் ஹெட்லி வெரிட்டி (Hedley Verity) இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் தன்னிச்சையாக சேர்ந்தார்.

மகரந்தம் »

மகரந்தம்

ஒரு புறம் ஆழ்கடலில் உள்ள மீன்களை கப்பல் கப்பலாக வாரி எடுத்து மாகடலில் உள்ள மீன் எண்ணிக்கையையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்ட உள்ள கடலேல்லாம் காலியான பின் பஸிபிக் மாகடல், இந்து மாக்கடல் என்று படையெடுக்கக் கிளம்பி இருக்கிறார்கள். இதன் நடுவில் யாரோ இரண்டு மூன்று அறிவியல் ஆய்வாளர்கள், நகர்களில் இருந்து நீர்நிலைகளில் கலக்கும் கழிவு நீரில் மனிதர் உட்கொண்ணும் மன அழுத்த நோய்க்கான மருந்துகளின் எச்ச சொச்சம் கலப்பது மீன்களைப் பாதிக்கிறது என்று அந்த மருந்துகளின் எச்சங்களை கழிவு நீரில் இருந்து அகற்ற வழி காண்கிறார்கள்.

மகரந்தம் »

மகரந்தம்

சமீபத்தில் ஃப்ரெஞ்சுப் படையினர், மாலி நாட்டிலிருந்து இந்தக் கும்பலை ஒழித்துக் கட்டவென்று ஒரு படையெடுப்பைச் செய்து அந்நாட்டின் பெரும் பகுதிகளிலிருந்து இவர்களை விரட்டி இருக்கின்றனர். கடந்த ஒரு வருடமாகப் பல நகரங்களைக் கைப்பற்றி இருந்த இஸ்லாமியவாதிகள் துரத்தப்பட்டு மக்கள் விடுதலை பெற்ற பின்னர் அந்த ஒரு வருட பயங்கரங்கள் வெளிவரத் துவங்கி இருக்கின்றன.

மகரந்தம் »

மகரந்தம்

பல நூறாண்டுகளாக உலகில் பல வெள்ளையரல்லாத மக்களைக் கொன்று, மதம் மாற்றி, அடிமைகளாக்கி, கொடுங்கோல் ஆட்சி நடத்தி, எத்தி, சுரண்டிச் சேர்த்த பெரும் செல்வம் யூரோப்பியரைப் பாதுகாக்கவில்லை. உலகெங்கும் ஏகாதிபத்தியத் திமிரில் போர்களை நடத்தி, லத்தீன் அமெரிக்க மக்களைக் கொடுங்கோலர் ஆட்சியில் ஆழ்த்தி அந்நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டிச் சேமித்த பெருந்தனம் அமெரிக்கர்களைப் பாதுகாக்கவில்லை. சீனாவிலோ இன்று வேலையில்லாத் திண்டாட்டம் அல்ல பெரும் பிரச்சினை. அங்கு ‘Sectoral imbalance’ என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள். அதை ஒரு பிரச்சினையாகப் பார்க்க முடிகிறது.

மகரந்தம் »

மகரந்தம்

திராட்சைத் தோட்டங்களில் இருந்து உயர்தரத் திராட்சைகளைத் திருடுகிறார்கள். இவை மிக உயர்தர மது தயாரிக்கவென அரும்பாடுபட்டு வளர்க்கப்படுபவை. தவிர தேன் கூடுகளைத் திருடுகிறார்கள். அது தேனுக்காகவா? இல்லை. தேன் கூடுகளில் உள்ள தேனீக்களை அமெரிக்காவில் வாடகைக்கு விடுவார்கள். பழத் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கை இல்லாது மரங்களில் பழங்கள் விளையாதாமே, அதற்கு தேனீக்கள் தேவை.

மகரந்தம் »

மகரந்தம்

சீனாவில் இருந்து தேன் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகிறதாம். அதுவும் அதை இந்தியாவிலிருந்து கொணரப்படும் தேன் என்று பொருளின் மூலத்தை மாற்றி, மறு முத்திரையிட்டு, கடத்தப்படுகிறது. எதற்கு, தேனை திறந்த சந்தையில் விற்கத்தான் அனுமதி இருக்கிறதே, இதிலென்ன கடத்தல்? சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா இப்போது வரி விதிக்கிறது. இறக்குமதி வரியைக் கொடுக்க அமெரிக்க வியாபாரிகளும் தயாரில்லை, ஏற்றுமதியின் விலையை இப்படி அதிகரிக்க சீனர்களும் தயாரில்லை. விளைவு இந்தியாதானே ஏமாளி, அதன் பெயரைப் பயன்படுத்தி இந்தியாவின் தேனாக அமெரிக்கச் சந்தையில் சீனத் தேனை விற்க ஏற்பாடு.

மகரந்தம் »

மகரந்தம்

காஸா போரில் பல கடும் பிரச்சினைகளின் உண்மை முகங்கள் தெரிய வருகின்றன. உலக நாடுகளின் பல சாய்வுகளும் புலப்படுகின்றன. சில நாடுகள் இரண்டு பக்கமும் பங்கெடுக்கும் நிலையில் உள்ளனர். இவற்றின் நடுவே, எங்கும் வெடிகுண்டுகளும், ராக்கெட்டுகளும் வெடித்துக் கொண்டிருக்கையில் அதிகம் வெளித் தெரியவராத போர் ஒன்றும் நடக்கிறது. உலகில் இப்போது நாடுகள், அவற்றின் ராணுவங்களைத் தவிர வேறொரு சக்தியும் உருவாகி உலவுகிறது. நிஜமாகப் பார்த்தால் இப்படி நாடுகளின் வடிவுகளைத் தாண்டிய பல சக்திகள் சில பத்தாண்டுகளாக உலக அரசியல் இழுபறிகளில் பங்கெடுத்து வந்திருக்கின்றன

மகரந்தம் »

மகரந்தம்

கருத்துக் கட்டுப்பாடு (சென்ஸார்ஷிப்) கடுமையாய் உள்ள இரான் போன்ற நாடுகளிலும் இரானியத் தயாரிப்பாளர்கள் வேறு நாடுகளில் திரைப்படங்களை உருவாக்கி உலக அரங்கில் அவை காட்டப்படுவது பல வருடங்களாய் நடந்து வருகிறது. சமுதாய, அரசியல் மற்றும் கருத்து மாற்றங்களுக்கு ஒரு கருவியாய் தயாரிக்கப்படும் இத்தகைய திரைப்படங்கள் உலகப்பட விழாக்களில் பெரிதும் விவாதிக்கப்படுகின்றன.

மகரந்தம் »

மகரந்தம்

மேதாவிகள், மேதாவிகளாகவே தான் பிறக்கிறார்களா? இல்லை, தாம் வளரும் சூழல், தமக்கு கிடைக்ககூடிய கல்வி அவர்கள் மேதமையைத் தீர்மானிக்கிறதா? மேதைமை அபாரமான படைப்பூக்கமாகவும் இருக்கலாம், ஒருவகை கிறுக்குத்தனமாகவும் இருக்கலாம். இல்லை, ஒருவரது பிறவி பலவீனத்தால் வாய்க்கும் அரிய திறனாகவும் இருக்கலாம். அதற்கென ஒரு பொதுவான சமன்பாடு இருக்கிறதா?

மகரந்தம் »

மகரந்தம்

பாம்புகள் என்றால் நம்மில் பலருக்கு அதீதப் பயம். குரங்குகளுக்கும் பாம்புகளைக் கண்டால் பயம். மனிதர்களின் பாம்பு குறித்த பயம் குரங்குகளாக இருந்த காலத்திலிருந்து தொடர்வது என்று சில உளவியலாளர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதெல்லாம் ஏதோ ஹேஷ்யம் போலத்தான் தெரிகிறது. ஆனால் ஏன் நம்மிடம் சில குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்ததால் பயம் போய் விடுகிறதா என்ன?

மகரந்தம் »

மகரந்தம்

சீனாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் பணக்காரர்களாக இருந்தால், சிறையைப் பார்க்கத் தேவை இல்லையாம். அட, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கும் போலிருக்கிறதே என்கிறீர்களா? இங்கு ஏதோ ஓரிரண்டு தினங்கள் கண் துடைப்பாகவாவது சிறைக்குப் போவார்கள். அதை மகத்தான தியாகம், பகுத்தறிவு இயக்கத்திற்காகப் பலியானோம் என்று புரளியும் செய்வார்கள். அங்கு அதெல்லாம் கூடத் தேவை இல்லையாம். ஆனால் யாரையோ சிறைக்கு அனுப்பியே தீர வேண்டும் என்பதால், தமக்குப் பதிலாக இன்னொரு நபரைச் சிறைக்கு அனுப்பி வைப்பார்களாம் பணம் குவித்தவர்கள்.

மகரந்தம் »

மகரந்தம்

முன்பு வழக்கம்போல விவசாயிகள் இன்னும் மண்குடிசைகளில் இருந்து இதை உற்பத்தி செய்தனர், இடைத் தரக நிறுவனமான ஹாலிபர்டன் என்ற அமெரிக்க நிறுவனம் பெரும் லாபத்தை அள்ளிக் கொண்டது. சமீபத்தில் விவசாயிகளின் எதிர்ப்பால் அவர்களுக்குக் கிட்டும் பங்கு உயர்ந்திருக்கிறதாம். இதுவுமே இன்னும் அமெரிக்க நிறுவனத்துக்குத்தான் லாபம் பெருமளவில் போகிறபடி இருக்கும். அமெரிக்கர்கள் லாபத்தைப் பிறருக்கு விட்டு விடுவார்களா என்ன? ஆனால் ஏதோ ஒரளவு ராஜஸ்தானின் விவசாயிகள் வாழ்வில் சிறிது முன்னேற்றம் வந்திருக்கிறது. மண் குடிசைகளை விட்டு, கல் கட்டிடங்களுக்கு நகர்ந்திருக்கிறார்களாம்.

மகரந்தம் »

மகரந்தம்

நாய்களின் மோப்ப சக்தியை கேன்ஸர் போன்ற வியாதிகளை கண்டுபிடிப்பதற்கும் உபயோகப்படுத்தலாம் என்று இன்றைய மருத்துவம் சொல்கிறது. ஆடிஸம், ஆஸ்பெர்ஜெர் போன்ற நோய்குறித்தொகுதிகள் உள்ளவர்களுக்கு நாய்களின் அண்மை அமைதியைக் கொடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அத்தகையவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் லேப்ரடார் போன்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன