இசை பகுதியில் பிற ஆக்கங்கள்
அனுபவம், இசை »
நான் சொல்லப்போவது ஒரு உண்மைச் சம்பவம். வகுப்பு முடிந்து பல்கலையிலிருந்து அறைக்கு திரும்பிய ஒரு கோடை காலத்தின் மாலை ஒன்றில் என் அறையின் கதவின் முன் உறையுடன் கூடிய ஒரு இசை குறுவட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை முன்வைத்துத்தான் இந்த கட்டுரை. இதைப்பற்றி இவ்வளவு நீளமான கட்டுரை எழுதுவேன் என்றும் அப்போது நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அஞ்சலி, ஆளுமை, இசை »
சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
ஆளுமை, இசை »
ஜானகி பாடிய பல்வேறு முக்கிய பாடல்களை/ ஒவ்வொருத்தரின் தனி விருப்பபாடல்களை நான் சொல்லாமலே விட்டிருக்கிறேன். காரணம் ஜானகி என்பவர் ஒரு சகாப்தம்/ சரித்திரம் என்றெல்லாம் மார்பு தட்டுவதோ அல்லது அவரின் வாழ்க்கை/தொழில் வரலாற்றை அலசி ஆராய்வதோ இது வரை வாங்கிய விருதுகளை பட்டியலிடுவதோ இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தியாவின் இரண்டாவது பெரிய கௌரவத்தை புறக்கணிக்கும் அளவிற்கு அவருக்கு இருக்கும் நேர்மையான நிலைப்பாட்டை அங்கீகரிப்பது மட்டுமே.
இசை »
இசை விழாவில் பல காலிப் பெருங்காய டப்பிகள் கேட்கின்றன. என்றுமே இவ்வாறுதானா என்பது இருபது வருடங்கள் மட்டுமே இசைப் பரிச்சயம் உள்ள எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒன்று மனதில் சுடுகிறது. அகடெமியும் இன்னசில சபாக்களும் முடிந்தவரை பல மாவட்டங்கள், மாநிலங்கள் என்று கூட்டிவந்து கலைஞர்களை மேடையேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் ‘வருடத்தில் ஒருமுறை’ போதாது என்பது கோலப்பன் நேரிடையாக தமிழ்நாட்டின் உள்ளே பலபகுதிகளுக்குச் சென்று, வருடா வருடம் மார்கழி இசைவிழா சமயத்தில் பேட்டி எடுத்துப் போடும் கலைஞர்களின் வாழ்க்கை நிலையை கவனிக்கையில் தெரிகிறது. அகடெமியில் ஒரு நாள் ஸ்பெஷல் பாஸிற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பவர்கள், சொந்த ஊரில், அருகிவரும் ‘குந்தளம்’ போன்ற வாத்யங்களை வாசிக்கும், வறுமையால் மதம் மாறும் கலைஞர்களை ஆதரிக்க அதை அளிக்கலாம்.
இசை, ரசனை »
பாடலின் மைய மெலடிக்கு இணையான முக்கியத்துவத்தை பாஸ்கிடாருக்குக் கொடுத்தார் இளையராஜா. இத்தனைக்கும் பாடல்களில் பாஸ்கிடாரின் உபயோகத்தைக் கவனித்துக் கேட்டு ரசிப்பவர்கள் வெகு சொற்பமானவர்களே. இன்று இணையதளங்களில் கிடார் வாசிக்கத்தெரிந்தவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறும் பல இசைக்கலைஞர்கள் வெகுவாகப் பரிந்துரைத்ததாலுமே ஓரளவுக்கு இளையராஜாவின் பாஸ்கிடார் பகுதிகளைப் பலர் கவனிக்க ஆரம்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் வெளியே தெரியாமல் ஒளிந்திருக்கும் பாஸ்கிடார் பகுதிகளுக்குக் கணக்கேயில்லை.
அனுபவம், இசை »
மறைந்த விழா நாயகரின் சிறப்பு குணம் ஒன்று உண்டு. உடன்வாசிப்பவர்களை எப்போதும் உற்சாகப்படுத்துபவர் என்பதை விழாவில் பேசியவர் குறிப்பிட்டுச் சொன்னதை முற்பகுதியில் விவரித்தோம். நம் பாடகரும் அதற்கு பேர் போனவர்தான். சமயத்தில் பாடுவது பத்து நிமிஷம் உற்சாகப்படுத்துவது கால் மணி நேரம் என்று கூட அவர் கச்சேரிகளில் நடந்துவிடுவதுண்டு. நேற்றைக்குப் பாவம் உடன் வாசித்தவருக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லை. தன்னிச்சையாய் வராத பாராட்டு சமயத்தில் ஃபுல்டாஸான யார்க்கராகிவிடுவதுண்டு. பாடகர் பாடிய ஸ்வரத்தை உடனே கிரகித்துக் கொள்ள முடியாமல் திணறி எடுப்பை குத்துமதிப்பாய் அணுகி சற்றே தப்பி சாஹித்யத்தை அவர் எடுக்கும் போது துல்லியமாய் எழுந்தது பாடகரின் ‘பலே’.
இயலிசை »
வீணையைத் தவில் போலவும், தவிலை மிருதங்கம் போலவும், வாய்ப்பாட்டை நாகஸ்வரம் போலவும் வாசிக்கிறவர்கள் சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஒரு பிரபல வைணிகர் பல துறைகளில் தேர்ந்தவர். ஆனால் அவர் வீணையைக் கேட்கும்போது மீசை முளைத்த பெண் பிள்ளையைப் பார்ப்பது போலிருக்கிறது. ஆண்களுக்குச் சரிநிகர்தான் பெண்களும். அவர்களும் குதிரை ஏறலாம். ஆனால் மீசை முளைத்தாலோ வளர்ந்தாலோ நமக்கு அருவருப்பு வருகிறது; பயம் கூட உண்டாகிறது.
இயலிசை »
அன்று ஒரே மேடையில் ஒருவர் குழல் ஊதினார். சல்யன் கர்ணனுக்குத் தேரோட்டிய மரபில் ஒருவர் அவருக்குப் பக்க வாத்தியம் வாசித்தார். இருவரும் ஒரே தினுசான இசைப் பயிற்சி உடையவர்கள். ஸ்வாராளி, ஜண்டை வரிசை, அலங்காரம் என்று தொடங்கி பால பாடம், முன்னேற்ற பாடம், விசேஷ பாடம் எல்லாம் இருவருக்கும் நடந்திருக்கின்றன. இருவரும் தத்தம் வாத்யங்களை உழைப்போடு பயின்றிருக்கிறார்கள். ஆனால் ஒருவரது வாத்யம் இசைக் கருவி போலவும், இன்னொருவரது வாத்யம் ஆயுதம் போலவும் ஒலிக்கிறது. ஒன்று இசையாகவும் இன்னொன்று இசை ஊடின ஓசையாகவும் கேட்கிறது, ஏன்?
இயலிசை »
இரண்டாம் உலக யுத்தத்துக்கு ஐரோப்பா தயாராகிக் கொண்டிருந்த நாட்களில்தான் இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் இசை மற்றும் நாட்டியம் சில புதிய இயந்திர சாதனங்களால் தேர்ந்த அல்லது பயிற்சி பெற்ற ரசிகர்கள் மட்டுமல்லாமல் அணைத்து மக்களும் பகிர்ந்து கொள்ளக் கூடியதொரு சூழ்நிலையை உருவாக்கியது. பேசும் படம், இடைத் தட்டு, வானொலி ஆகிய சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சங்களைவிடப் பாரம்பரியக் கலாசார வெளிப்பாடுகளை அதிகம் நம்பியிருந்தன. ஒரு சிறிய டீக்கடையானாலும் அங்கு ஒரு கிராமபோன் நாள் முழுவதும் ஒலித்துக் கண்டிருக்கும்.
இசை, ரசனை »
‘கர்ணன்’ திரைப்படத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விஷயம் மனதைக் கவர்ந்து வந்திருக்கிறது. சிறுவயதில், ‘கர்ணன்’ திரைப்படத்தில் கர்ணனாக நடிக்கும் சிவாஜி கணேசன், தன் மாமனாரிடம் ‘கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று கர்ஜிக்கும் ஒரு இடத்துக்காகக் காத்திருந்து கைதட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அந்த ஒரு காட்சி போக, இந்திரன் மாறுவேடத்தில் வந்து கர்ணனிடம் கவச குண்டலத்தைக் கேட்டவுடனே, சிவப்பு, மஞ்சள் ஒளிவெளிச்சத்தில் சிவாஜி கணேசன் பற்களைக் கடித்து வலியைப் பொறுத்து சதையைப் பிய்த்துக் கொண்டு கவசகுண்டலங்களை அறுக்கும் போது உடம்பு பதறி அம்மாவின் மடியில் சாய்ந்திருக்கிறேன்.
இயலிசை »
திமிறி நாயனத்தின் ஒத்துச்சத்தமே - அதன் எச்சான ஒலி - மிக அருகில் நின்று கேட்க ராஜரத்தினம் சங்கடப்படுவதாக நான் உணர்ந்தது, கோவில்பட்டியில் அவர் வாசிக்க வந்த ஒரு திருவிழா ஊர்வலத்தின் போதுதான். ஒத்துவாசிப்பவனை, தள்ளிப் போய் நில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இது நடந்து பல நாட்களுக்குப் பிறகு ராஜரத்தினம் பல வகைப்பட்ட நாயனங்களை வைத்து வாசிப்பதாகக் கேள்விப்பட்டேன்.
இசை »
‘உன் பார்வையில்’ என்ற பாடலும் இந்திய இசைக்கருவிகளில் உருவாக்கப்பட்ட ஜாஸ் வால்ட்ஸுக்கு உதாரணம். ஹார்மோனியத்தால் நிறைக்கப்பட்டிருக்கும் பாடலின் ஆரம்ப இசை ஜாஸ் வால்ட்ஸை கற்பனைக்கெட்டாத இடங்களில் பயன்படுத்துவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஆளுமையைக் காட்டுகிறது. இப்பாடலின் ஹார்மோனியப் பகுதிகள் இளையராஜாவே வாசித்திருப்பவை. அருமையான ஹார்மோனியமும், தேர்ந்த குரல் வெளிப்பாடும் இப்பாடலின் இனிமையைப் பலமடங்கு கூட்டுகின்றன. இதைப் போலவே கேட்பதற்கு இனிமையான பாடலுக்கான இன்னொரு உதாரணம், எண்பதுகளில் வெளிவந்த ‘கீதம் சங்கீதம்’.
இசை »
இளம் வித்வானாய் இன்றைக்கு சீஸன் சர்க்கியூட்டில் உள்ளே வருவதும் கடினமே. பாரம்பர்யம்மிக்க சில சபாக்களே திறமையை மட்டுமே வைத்து அழைப்புவிடுக்கின்றனர். பல சபாக்கள் இங்ஙனம் செயல்படுவதில்லை. இளம்கலைஞர்கள் மேலெழும்ப ஆரபி, தேவகாந்தாரி என்று மட்டும் சஞ்சரிக்காமல், இவ்வகை நுண்ணரசியல், நரஸ்துதி, முகஸ்துதி என்று நிஜத்திலும், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அநேகர் “லைக்” செய்ய இணையத்திலும் சஞ்சாரம் செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளது. போதாததற்கு, பொதுவில் வைக்கமுடியாத சில தேவைகளும் உள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள வியாஸர்பாடி கோதண்டராமனை இவ்விடத்தில் மீண்டும் உங்களிடம் குறிப்பிடுகிறேன்.
இசை »
இந்த டிசம்பர் சீஸனில் (2011 -12) கேட்ட ராகம்-தானம்-பல்லவிகளைப் பற்றி விரிவான அலசலைத் தருவதோடு, ராகம்-தானம்-பல்லவியின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்குகிறார் அருண் நரசிம்மன்:
தமிழிலேயே பாடினாலும், இசையாய் கேட்கையில் மனதிற்கு ரம்யமூட்டுவதற்கு பொருள் செறிவின் பங்களிப்பும் முக்கியம் என்றுணர முடிந்தது. வருடாவருடம் உழைத்து எதையாவது வித்தியாசமாய் செய்யமுனையும், இன்றைய முன்னனி வித்வான்களான கிருஷ்ணா சஞ்சய் இருவருக்கும் இடையே நிலவும் ஆரோக்யமான போட்டியில், இவ்வருட அகதெமி வின்னர் சஞ்சய். சரி இதுதான் 2011 சீசனுக்கு சூப்பர் கச்சேரி என்று நினைத்திருந்தேன். வேதம் சிரித்தது. என் பாட்டியின் வயதையொத்த வல்லியின் உருவில்.
இயலிசை »
காந்திஜியைப் பற்றியே இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என்றால், அவரது சிஷ்யையான மீரா பென்னைப் பற்றி வேறு எப்படி நினைக்கத் தோன்றும்? ஆனால் கடற்படை அதிகாரியின் மகளான மீரா பென்னுக்கு சாஸ்திரீய சங்கீதத்தில் அபாரமான ஆசை இருந்திருக்கிறது என்றால் நம்பத்தான் முடியுமா? இளமையில் பியானோ கற்றிருக்கிறார். பீதோவன் படைப்புகளின் பைத்தியமாகவே இருந்திருக்கிறார். பீதோவன் வாழ்ந்த வியென்னா, பான் நகரங்களுக்குப் போய் அவர் நடாடிய தெருக்களில், அவர் ஏறிய, இறங்கிய குன்றுகளில், காடுகளில் எல்லாம் மீரா பென்னும் திரிந்திருக்கிறார். அவரைப் பற்றி என்ன புத்தக கிடைத்தாலும் படித்திருக்கிறார்.




