முகப்பு » தொகுப்பு

சிறுகதை பகுதியில் பிற ஆக்கங்கள்

சிறுகதை »

தேடல்

கணிணிகள் பொய் சொல்வது இல்லை. மறைமுகமாகப் பேசுவது இல்லை. அதனால் அவைகளுடன் தர்க்கம் செய்வது சுலபம். அதே நேரம் அவைகளுக்கு மனிதரின் எந்த உணர்ச்சியும் இல்லை. வஞ்சகமும் இல்லை. நேர்மையும் இல்லை. கருணையும் இல்லை, முதுகில் குத்துவதும் இல்லை. நீங்கள் மனிதர்களையும் கணிணியைப் போன்று இருக்க எதிர்பார்த்து விட்டீர்கள். அதுவும் ஒரு பாரபட்சமான கோணத்தில். மனிதன் கருணை காட்டினால் அதை நீங்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை என நினைக்கிறேன். ஆனால், நேர்மை, சரி என்று நீங்கள் நினைப்பவற்றில் இருந்து அவன் இம்மி விலகினாலும் உங்களுக்கு அது உறுத்திக் கொண்டு தெரிகிறது. கோபம் வருகிறது.

சிறுகதை »

உங்களுக்குக் கேட்டதா?

எம்.ஜி.ஆருக்குப் பின்னர் லியான்னல் மெஸ்ஸி வந்தார். கடந்த வருடம் சென்று வந்த ஸ்பானிஷ் கிளாசிலிருந்தே மெஸ்ஸியை எனக்குத் தெரியும். அவருக்குப் பின் தூக்கு போட்டுக் கொண்ட என் தாத்தாவின் மூத்த மனைவி, ஸ்டீவ் ஜாப்ஸ் என்று ஆளாளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதற்கு நடுவில் பசித்தது. ப்ரெட்டை தண்ணீரில் நனைத்துச் சாப்பிட்டேன். அடுத்த விளையாட்டாக எனக்குப் பிடித்த படங்களை காட்சி பை காட்சியாக என் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தேன். மெளன ராகம், இயற்கை, எங்கள் வீட்டுப் பிள்ளை என்று ஒவ்வொன்றாய்.

உலகச் சிறுகதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு »

சின்ன விஷயங்கள்

குழந்தை முகம் சிவக்க அலறி அழுதது. அவர்களின் சிறிய கைகலப்பில் அடுப்பிற்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பூச்சட்டியைக் கீழே தள்ளிவிட்டார்கள். அவன் அவளைச் சுவரோடு சேர்த்து அழுத்தி, அவள் பிடியை விடுவிக்க முயன்றான். குழந்தையை பிடித்துக்கொண்டு அவளை முழுபலத்தோடு தள்ளினான்.

சிறுகதை »

நம்பிக்கை

உடன் பிறந்தவர்கள் நான்கு பேரிலும் பெண் குழந்தை உள்ள ஒரே குடும்பம் இவருடையது தான். ஒரு கோழி குஞ்சை போல் அத்தனை சிறியதாக, வெதுவெதுப்பாக இருந்த பிறந்த குழந்தையை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பே கண்ணாக இரு கைகளிலும் ஏந்தி மனம் பொங்க நின்றார். இத்தனை சிறிய உயிருக்கு இவ்வளவு கனம் இருக்க முடியுமா? கனம் அதன் உடலில் இல்லை.குவிந்த அவர் கவனத்தில் இருந்திருக்க வேண்டும்.

சிறுகதை »

பயம்

மனித மனம் விசித்திரமானது. சிலரைப் பார்த்ததும் உடனே பிடித்துவிடும். சிலரைப் பார்த்ததும் காரணமே இல்லாமல் எரிச்சல் வரும். அந்த இளைஞனின் நிதானமும், பணிவும் கண்டுச் சுந்தருக்கு அவனைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் சுந்தருக்கு இப்போது எரிச்சல்தான் வந்தது. காலங்காலையில் வந்துத் தொந்தரவு செய்கிறானே என்ற எரிச்சல். ஏதாவது நன்கொடை என்று கேட்டால் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடவேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.

சிறுகதை »

கனவு

அபி, கூடத்தின் கருங்கல் தரையின் மேல் கால் மீது கால் வைத்து ஆட்டியபடியே படுத்திருந்தாள். அவள் ‘ப்ளே ஸ்கூலி’லிருந்து கொண்டு வந்த பையும் தண்ணி பாட்டிலும் அவள் கையருகே இருந்தன. அவளுக்கு மிக அருகில் தாழ இறங்கிய இரும்பு கட்டிலில் எம்.வி.மாமா படுத்திருந்தார். இந்த தூங்கும் நேரம் இன்னும் எத்தனை மணி நீளும் என்று அபி யோசித்துக்கொண்டிருக்கையிலேயே…

சிறுகதை »

நந்தாதேவி

அங்கு ஒரு ஓநாய் என்னையே வெறித்துப் பார்த்திருந்தது. சேற்றில் மூழ்கி எழுந்தது போல உடல் முழுவதும் சடை சடையாக அடர்ந்த கரிய முடி. முழுவதுமாக மூடாத வாய். பற்களிலிருந்து கோழை வழிந்தது. தலையில் அடிபட்டது போல உறைந்த ரத்தச் சிகப்புக் கட்டிகள். எனது கால்கள் பின்வாங்கத் தொடங்கின. உடனடியாக திரும்பி ஓடிவிடக்கூடாது. உயிர் தப்பாது. ஓநாய்க்கு ஆபத்தில்லை எனும்படியாக எனது ஒவ்வொரு உடலசைவும் இருந்தாக வேண்டும்.

சிறுகதை »

மணியம் செல்வன்

தேவைக்கு அதிகமாக வெட்டிவிட்ட சுண்டுவிரல் நகம் போல உறுத்தியும் உறுத்தாமலுமான தூறல் மாலையில் மைதிலியின் கேட்டதற்காக நான் அன்று உமாவை, நனைந்த ம.செ. ஓவியத்தை என் பைக்கில் அவள் மாம்பலம் பெரியப்பா வீட்டில் கொண்டுவிட்டேன்.

சிறுகதை »

ஆடியில்  கரைந்த மனிதன்

நள்ளிரவில் ஒரு சிறிய அறையில் அகல் விளக்குகள் மட்டுமே மினுங்கும் வெளிச்சத்தில் மஞ்சள் சேலை மஞ்சள் ஜாக்கட்டில் பளீரென்று மஞ்சள் பூசிய முகத்தோடு எஸ் ஜானகி மாதிரி என்னா என்று விழித்துப் பார்க்கும் வண்டிச் சக்கரப் பொட்டு -சீவல் சேர்த்த வெத்திலை போட்டு போட்டுச் சிவந்த நாக்குடன் அந்த அம்மாவே காளியின் ப்ரோடோ டைப் போல இருந்தாள் .மிக கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒப்பனை.அந்தக் கண்கள் மட்டும் எதோ ஒரு போதையில் அமிழ்ந்தது போலிருந்தன .நீரில் மிதக்கும் விளக்குகள் போல..அவள் இதழ்களே மீண்டும் கண்கள் ஆனார் போல .

சிறுகதை »

மயக்கம்

அப்பாவிடம் பலமுறை திரும்பத்திரும்ப சொல்லச்சொல்லி கேட்டது தான். சுந்தாச்சுச் சித்தப்பா யானையின் பின்னால் ஓடிப்போன கதை. எத்தனை முறை கேட்டாலும் ராமனுக்குச் சலிக்காது, அவன் அப்பாவிற்கும் சொல்லிச் சலிக்காது. ஒவ்வொரு முறையும் அவரின் மனநிலையைப் பொறுத்து பல கிளைக் கதைகளுடன் வளர்ந்துகொண்டே வந்தது.

சிறுகதை »

வட்டங்களுக்கு வெளியே

அவரவருக்கு என்று ஒரு வட்டப் பாதையை ஏற்றுக் கொண்டு அந்த வட்டப் பாதையில் மற்றுமொரு குழு எதிர்ப்படுவதை எப்போதும் தவிர்ப்பதாகவே தோன்றியது. சூரியனைச் சுற்றி பல கோள்கள் தமக்கிட்ட பாதையில் சுற்றி வருவதைப் போல ஆசானைச் சுற்றியும் இப்படி பலக் குழுக்கள் இருக்கக் கூடும். ஆசானைப் போல இன்னும் பல ஆசான்கள் அவரவர் குழுக்களில் தனித்தனி வட்டப் பாதைகளில் பயணிக்கிறார்கள். மேலும் பார்த்தால் ஆசான்கூட ஒரு வட்டப் பாதையில்தான் பயணிக்கிறார். பல ஆசான்கள் ஒரு குழுவாக சார்ந்து ஒரு வட்டப் பாதையில் பயணிப்பதாகவும், மற்றவர்களுக்கு அந்தப் பாதையில் இடமில்லை என்றும் தோன்றியது.

இலக்கியம், உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »

நடனம் ஆடுவீர்களா?

இளைஞனும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர், ஒரு கரம் கோர்த்து இன்னொரு கரத்தால் அணைத்து உடல்கள் அழுந்தி உரச மெல்ல நடனம் ஆடினார்கள். இணைந்து ஆடியபடியே அந்த முற்றத்தில் இங்கும் அங்கும் நகர்ந்தார்கள். அந்த இசைத்தட்டு ஓடி முடிந்ததும், அதையே மறுபடியும் சுழல விட்டு தொடர்ந்து ஆடினார்கள்.

உலகச் சிறுகதை »

ஒரே தீர்வு

அவனுக்கே சொந்தமான ஒரு மாபெரும் கனவை அவன் உருவாக்கினான். எல்லையற்ற சிக்கல்களாலான இக்கனவின் எல்லா நுணுக்கங்களும் , கடைசி புள்ளி வரையிலும் கூட திட்டமிடப்பட்டது. அதனுள் அவன் தன் வாழ்வை புதுப்பித்துக் கொள்வான்.

இந்தியச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »

சந்தை நாள்

முதன்முதலாய் அவனைக் கவனமாய் பார்த்து உண்மையாய் அவனை பாராட்டியது பழவியாபாரி பியாரிலால்தான்: ‘வா கேகுபாய், என்ன நேர்த்தியாய் உடை போடுறிங்க! காலையில் கடைக்கு வரும்போது இருப்பது போலவே நாள் கடைசிவரைக்கும் உங்கள் உடை மடிப்பு கலையாமல், புதிதாய், அப்படியே இருக்கே. உங்கள் வேலைலே உங்களுக்கு நிஜம்மாகவே எத்தனை விருப்பம்!!” என்றான். இது கேகுவின் உள்ளத்தைத் தொட்டு, அன்றிலிருந்து இரு கடைக்காரர்களிடையும் ஒரு பந்தம் உருவானது.

சிறுகதை »

பித்து

மறுநாள் மாலை வேலையிலிருந்து திரும்பும்போது அந்தப் பெண்ணை அதே கட்டிடத்தில் பக்கத்தில் திரும்பப் பார்த்தேன். 25 , 30 வயது இருக்குமோ என்னவோ. மொட்டைத் தலையில் முடி அங்கங்கே முளைத்திருந்தது. மண்டையில் நீளமாய் தையல் போட்ட தழும்பு இருந்தது. குச்சியான உடம்பிற்கு மிகபெரிதான ஒரு நைட்டியை போட்டுக் கொண்டிருந்தாள். நிறைய கிழிசல்கள். கையில் எதையோ வைத்துக் கொண்டு கட்டிட வாட்ச்மேனின் சின்னக் குழந்தையை ‘வா வா’ என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.