புத்தகவிமர்சனம் பகுதியில் பிற ஆக்கங்கள்
இலக்கிய விமர்சனம், கட்டுரை, புத்தகவிமர்சனம் »
புத்தகவிமர்சனம் »
நாவலின் முதல் வாக்கியத்திலிருந்தே ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. இது அதி புனைவா, மர்ம நாவலா, திகில் நாவலா, கலைஞர்கள், கலை உலகம், அதில் நடக்கும் மோசடிகள் பற்றியதா, அல்லது ஒரு சிதைந்து கொண்டிருக்கும் மனதின் நாட்குறிப்பா என்று இறுதி வரை எந்த முடிவுக்கும் வரமுடியாமல், நாவலின் பெயரிடப்படாத கதைசொல்லியை, அவன் மனதை நாம் பின்தொடகிறோம். ஒரு கதையை நேர்கோட்டில் நடக்கும் சம்பவங்களாக எழுதி, பக்கங்களை முன் பின்னாக மாற்றிப் பிரசுரித்தால் எப்படிஇருக்குமோ அப்படி உள்ளது இது.
புத்தகவிமர்சனம் »
கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் சில பகுதிகள் வரத்தொடங்கியதிலிருந்து கதை தொடங்குகிறது. இந்தியாவின் வரலாறு என்பது முகமதியர்களின் படையெடுப்பிலிருந்தே அறியப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்தப் பிராந்தியத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. அலெக்ஸாண்டர், 326 BCயில் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தார் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. அதற்கு முன்பும் ஒன்றும் தெரியாது, பின்னும் ஒன்றும் தெரியாது. ஆனால், இந்தியாவில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் சிலர், இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டினர்.
புத்தகவிமர்சனம் »
புத்தகவிமர்சனம் »
மிருகமும் மனிதனும் ஒருவரையொருவர் நிரப்பிக்கொள்ளும் தருணம் தான் வாடிவாசல்.அங்கு ஒரு கணமேனும் மனிதன் மிருகமாகிறான், மிருகம் மனிதனாகிறது. பிச்சிக்கு, அக்காரியின் கொம்புகளில் தன் தந்தையின் ரத்தம் இன்னும் சிவப்பாக இருப்பது போல தோன்றும் போது, அக்காளைக்கும் அவனது கண்களில் அவன் தந்தைக்காக வந்திருக்கும் வஞ்சம் தெரிந்திருக்கலாம். அச்சமயம், தான் ஒரு மனிதனுக்கு முன் நிற்பது போலவே பிச்சி உணர்கிறான்.
புத்தகவிமர்சனம் »
‘கண் விழித்த கானக’த்தின் இலக்கியத் தகுதியைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் அத்தனை அலட்சியம் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், இன்று ஜார்கண்ட் மாநிலமாக அறியப்படும் பகுதியில் பழங்குடியினத் தலைவர் ஒருவர், சென்ற நூற்றாண்டின் துவக்கங்களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நிகழ்த்திய ஆயுதப் போராட்டத்தை விவரிக்கும் நாவல் இது. இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் உள்ள ஒரே ஆதிவாசித் தலைவரின் உருவப்படம், 1870 முதல் 1900 வரை முப்பதாண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த பிர்ஸா முண்டாவின் படம்தான்.
புத்தகவிமர்சனம் »
ஒரு நேர்மையான, மேலான இலக்கியப் படைப்பின் பணி என்பது காலங்காலமாக முன்வைக்கப்படுகிற வரலாற்றின் உள் அடுக்குகளில் மறைந்து கிடக்கும் உண்மைகளைக் குறித்த தேடல்தான். இதுவரையில் அறியப்படாத உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே அதன் இலக்காக இருக்கும். ‘வெட்டுப்புலி‘ கதையின் வேர்களை நோக்கி மிக வலுவாக நகரும் ஒரு சரடு உண்மைக்கு மிக அருகில் சென்றுள்ளது என்பதை முன்னுரையில் வாசக சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள பகுதியிலிருந்து நம்மால் உத்தேசிக்க முடிகிறது.
புத்தகவிமர்சனம், ரசனை »
‘ஜவஹர்லால் நேரு இவரு தோள்ல கைபோட்டாராம்லா! நல்லா கத விடுதாருவே, பாட்டையா’ என்றுதான் ‘நான் பார்த்த ரோஜாவின் ராஜா’ கட்டுரையைப் படித்தபோது நினைக்கத் தோன்றியது. ஆனால் பெரியவர் வெங்கட் சாமிநாதன் தன்னுடைய அணிந்துரையில்(அது அணிந்துரைதானே?) ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவாவது, மனுஷன் அளக்கிறார் என்று தோன்றலாம். இல்லை, அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் நிறைய உண்டு’ என்கிறார். உண்மைதான். பாட்டையா நேரில் சொன்ன, எழுத்தில் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை அறிவேன். அதையெல்லாம் அவர் எழுதினால், இணையத்தில் பாய்கிற 66A மாதிரி, வேறேதாவது A,Bயில் தொடங்கி Z வரை அவர் மீது பிரியமாகப் பாய்ந்துத் தழுவக்கூடும்.
புத்தகவிமர்சனம் »
இந்த நூல் பிரமிக்கத்தக்க புள்ளிவிவரங்கள் மற்றும் மேற்கோள்களின் தொகுப்பாக இருக்கிறது. பொதுவாகவே நம் அனைவருக்கும் கடந்துபோன பொற்காலத்தைக் குறித்த ஒரு மயக்கமும் நமக்குப் பின்னால் வருவது ஒரு பேரழிவே என்ற எண்ணமும் உண்டு. இந்த மனநிலையை மிகக் கறாரான புள்ளிவிவரங்களைக் கொண்டு நிராகரிக்கிறது இந்நூல். உதாரணமாக, 1776ல் ஆதாம் ஸ்மித், ஒரு சராசரி ஆங்கிலேயன் பண்ணைத் தொழிலாளி என்றும் அவனது வாழ்க்கைத் தரம் ஒரு ரோமானிய அடிமையின் வாழ்க்கைத் தரத்தைவிட உயர்ந்ததல்ல என்றும் குறிப்பிடுவது இந்நூலில் நினைவு கூரப்படுகிறது.
புத்தகவிமர்சனம் »
வீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
புத்தகவிமர்சனம் »
தற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் ஒரு பிரபல மருத்துவரின் மகனாகப் பிறந்த நய்யார் லாகூர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்து வெளிவந்தவுடன் இந்தியப் பிரிவினைக்கு ஒரு நேரடி சாட்சியாக இருக்க நேரிடுகிறது. தாமும் தம்குடும்பமுமே அகதிகளாக இந்தியாவுக்கு வந்து மற்ற எத்தனையோ எண்ணற்ற அகதிகளைப்போல் தம் வாழ்வையும் புதிதாக ஆரம்பிப்பதிலிருந்து துவங்குகிறது இந்தச் சுயசரிதை. சியால்கோட் நகரிலிருந்து டெல்லிக்கு வரும் வழியில் தங்களது அனைத்தையும்க ணப்பொழுதில் இழந்து பிச்சைக்காரர்களாகவும் நாடோடிகளாவும் மாற நேரிட்ட எண்ணற்ற மனிதர்களில் ஒருவராகிறார் குல்தீப் நய்யார்.
புத்தகவிமர்சனம் »
பணத்தட்டுப்பாட்டின் காய்ச்சலில் வதங்கிய இருவரும், சி.சு.செல்லப்பாவும், மணிக்கொடி எழுத்தாளர்களும் எப்படி உயர் இலக்கியம் என்ற கனவின் குளுமையில் இளைப்பாறினார்கள் என்பதை இங்கு படிக்கலாம். காலணா, அரையணாவெல்லாம் இவர்களுக்கு அத்தனை முக்கிய விஷயங்களாக இருந்தது தெரிந்து இவர்கள் எதற்காக அத்தனை போராடி ‘இலக்கியம்’ படைத்தார்கள் என்பது குறித்து நமக்கு வியப்புதான் எழும். ஏனெனில் இவர்கள் படைத்த இலக்கியத்தை வாங்கிப் படிக்க அப்படி ஒரு சமூகமே அங்கு இல்லை.
புத்தகவிமர்சனம் »
இன்றைக்குப் பொய்த் தேவு நாவலை வாசிப்பவர்களுக்கு க.நா.சு தேர்ந்தெடுத்த உணர்ச்சியற்ற நடை வித்தியாசமாகத் தோன்றலாம். மிகவும் உணர்வு பூர்வமான வாழ்க்கை நிகழ்வுகளைப் போகிற போக்கில் சொல்லிச் சென்றிருக்கிறார். ஒட்டுமொத்த நாவலையும் படித்துப் பார்க்கும்போது வாழ்வின் சுழிப்புகளையும் ஜார்ஜ் எலியட் குறிப்பிடும் அன்றாட நிகழ்வுகளையும் மூன்றாம் மனிதரின் பார்வை போலக் குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு தருணத்தை உணர்ச்சிகரமாகப் படைத்துவிட்டு மற்ற கணங்களை மேலோட்டமாகக் குறிப்பிட்டால் அசாதாரண நிகழ்வுகள் வாழ்வை செழுமையாக்குகின்றன என்பது போன்ற தோற்றத்தைத் தந்துவிடும் அபாயம் உள்ளது.
புத்தகவிமர்சனம் »
பொய்த்தேவு நாவல் தனித்தன்மை கொண்டது. முக்கியமான நாவல். இப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் படைப்புக் கோட்பாட்டையும் எழுத்து 85, ஜனவரி 1965 இதழில், “பொய்த்தேவு (விமர்சன ஆய்வு)” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட சி.சு.செல்லப்பாவின் விமரிசனம் விரிவாகப் பேசுகிறது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் இங்கே.
புத்தகவிமர்சனம் »
பழநி சுப்ரமண்யத்தின் இடதுகை பழக்கத்தில் தொடங்குகிறது நூலின் தனி ஆவர்தனக் கச்சேரி. கற்பனைச் சித்தரிப்பாய் சென்ற நூற்றாண்டின் முப்பது நாற்பதுகளில் கோலோச்சியிருந்த செம்பை வைத்தியநாத பாகவதருக்கும், உடன் வாசித்துவந்த வயலின் வித்வான் மைசூர் சௌடய்யாவிற்கும், இடது கை மிருதங்க வித்வானான சுப்ரமண்யத்தை மேடையேற்றுவதில் இருந்த கருத்து வேறுபாடுகளையும் (மிருதங்கம் நன்கு ஒலிக்க மேடையில் இடம்மாற்றி உட்கார வேண்டும்), செம்பையின் ஆதரவையும், சௌடய்யாவின் மனமாற்றத்தையும், வரலாற்று சம்பவத்தை சிறுகதை வடிவில் அருமையாய் விவரிக்கிறது.




