முகப்பு » தொகுப்பு

புத்தகப் பகுதி பகுதியில் பிற ஆக்கங்கள்

புத்தகப் பகுதி »

புழுதியில் வீணை

ராஜாஜி பாரதியை குறுகிய நோக்கில் அன்றி, விரிவான தளத்தில் புரிந்து கொண்டிருப்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. எனினும், ராஜாஜியின் முதலில் சொல்லப்பட்ட கூற்று தொடர்பாக நாம் எழுப்பக்கூடிய இன்னொரு எதிர்கேள்வி உண்டு: ஒருவன் ஒரே சமயத்தில் தேச பக்தனாகவும் கவியாகவும் வேதாந்தியாகவும் இருக்க முடியாதா என்ன? இந்தக் கேள்வியைத்தான் வ.ரா. உண்மையில் கேட்டிருக்க வேண்டும். மாறாக, ‘வேதாந்தி’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் சிலம்பமாடியதன் மூலம் பிரச்னை திசை திரும்பி விட்டதென்றே சொல்ல வேண்டும்.

அரசியல், புத்தகப் பகுதி »

உடையும் இந்தியா? - புத்தகத்திலிருந்து ஒரு பகுதி

இந்தியாவைக் கூறுபோடுவதில் அமெரிக்காவுக்குப் பல லாபங்கள் இருக்கின்றன. மற்றொரு வலிமையான போட்டியாளர் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அமெரிக்க கம்பெனிகள் தங்கள் வேலைகளை இந்தியத் தொழிலாளர்களுக்கு அனுப்ப முடியும். ஒரு வலிமையான அரசு இல்லாதபட்சத்தில் அப்படி அனுப்பப்படும் தொழில்கள் முழுக்க முழுக்க அமெரிக்க லாபத்தைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத முறையில் இருக்க முடியும்.

ஆளுமை, புத்தகப் பகுதி »

துருவ நட்சத்திரம் - தனி ஆவர்த்தனக் கச்சேரி

இந்தக் கணக்கெல்லாம் கையில பேச அசுர சாதகம் பண்ணிருப்பாய் இல்லையா? கேட்க நன்னாத்தான் இருக்கு. இதையெல்லாம் ரசிக்கவே நிறைய ஞானம் வேணும். போன கச்சேரியில பிரமாதமா தனி வாசிச்சாய். திஸ்ரத்துக்குள்ள சதுஸ்ரத்தை நுழைச்சு வாசிச்சதெல்லாம் பெரிய காரியம். பட்சே, நான் கல்யாணி கிருதி அனுபல்லவியில கார்வை குடுத்து நிறுத்தினப்போ ஸர்வலகுவா ரெண்டு ஆவர்த்தம் வாசிச்சயே, அப்போ நிஜமாவே சிலிர்த்துப் போச்சு. அதுனாலயாக்கும் இன்னொருக்கா அதே எடத்தைப் பாடினேன்.