மௌனத்தின் குரல் – ஓர் அறிமுகம்

திருமணத்திற்குப் பின் தன் ரசனைகள், விருப்பு வெறுப்புகள் என எல்லாவற்றையும் உடைத்து கணவனின் எதிர்பார்ப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தன்னை மறுவார்ப்பு செய்து கொள்ள வேண்டியது பெண்களின் கடமையாகவே நம் சமூகத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு ஆண் வாயைத் திறந்து இதைச் சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை.