இரண்டு பறவைப் படங்கள் : துபாய் திரைப்பட விழா

குழந்தைகளைப் படிக்க வைக்க இயலாத ஒரு சமூகத்தினர் சென்னையின் மையப் பகுதியில், சுழித்தோடும் சாக்கடைக் கழிவு நதிக்கு அருகாமையில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத நம் அரசு வீட்டிற்கு இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்குகிறது. இம்மாதிரி அபத்தங்களை கொதிப்பாக, பிரச்சாரமாக சொல்லாமல் மிக இயல்பாக சொல்லியிருப்பதில் இத்திரைப்படம் தனித்துவம் பெறுகிறது. தங்களுக்கு வாய்த்த வாழ்வைப் பற்றி சதா புகார் கூறிக்கொண்டிருக்காமல் அவ்வாழ்விலும் கிடைக்கும் உயிர்ப்பான தருணங்களில் கதாபாத்திரங்கள் நிறைந்து தளும்புகின்றன.

ஹயாவோ மியாசகி – இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம்

எல்லாக் குழந்தைகளைப் போலவே பால்யத்தில் நானும் சிறுவர் படக்கதைகள் வழியாகத்தான் கதைகளின் உலகிற்குள் போனேன். அந்தப் படக்கதைகள் தந்த பரவசம் நினைவின் அடியாழத்தில் தேங்கிப் போய் விட்டிருக்கிறது. மீண்டும் இத்தனை வருடங்கள் கழித்து மியாசகி வழியாகத்தான் அப்பரவசங்கள் மெல்ல மேலெழுந்து வந்தன. மியாசகியின் ஒவ்வொரு திரைப்படமும் என் பால்யத்தை மீட்டுத் தருகிறது. மிகப்பெரும் கனவு வெளியை, கிளைகளாய் பெருகும் கதைகளை, இயற்கையின் மீதான நேசத்தை இத்திரைப்படங்கள் என்னுள் விதைக்கின்றன.