புத்தகவிமர்சனம் »
கோயில் பற்றி பேசுவது எப்போதும் சுவாரசியமான விஷயம். கோயில், வெறும் வழிபாட்டுத் தலம் அல்ல. ஒரு சமூகத்தின் அரசியல்,நிர்வாகம், வரலாறு, கலை, பண்பாடு ஆகியவற்றை சுமந்து நிற்கும் காலப் பெட்டகம். கோயிலும், கோயிலைச் சுற்றிய மாட வீதிகளும் அதன் கட்டமைப்புகளும் சமூகத்தில் ஆன்மீகத்திற்கு இருந்த உன்னத நிலையை பளிச்சென்று சொல்லிவிடுகின்றன. இந்து சமூகத்தை வேரோடு அழிப்பதற்கான செயல்திட்டம், அதிகார பீடங்களாக இருக்கும் கோயில்களை அழிப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது கைபர் கணவாயில் உள்நுழைவதிலேயே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது.



