முகப்பு » தொகுப்பு

சமூக வரலாறு, புத்தக அறிமுகம், வரலாற்றாய்வு »

தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்

ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ. கணேசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பிலான புத்தகம் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க சமூக வரலாற்று நிகழ்வான தோள் சீலைக் கலகம் பற்றிய பல அரிய உண்மைகளை வெளிக்கொணரும் இப்புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற இந்த ஆய்வு நூல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தவருக்கும் நாடார் சமூகத்தவருக்கும் இடையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பானதாகும்.